வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 22 June 2021

இனி அதிரடி விற்பனை செய்ய முடியாது...?

ஆன் - லைன் வர்த்தக தளங்களில் பெரும் தள்ளுபடியுடன் 

வழங்கப்படும் மோசடி விற்பனைகளை தடைசெய்யவும், இந்த நிறுவனங்களை DPIIT தளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும் முன்மொழியப்பட்ட 2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளை திருத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன .


இது தவிர, ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையத்தில் தேடலின் போது, பயனர்களை தவறாக வழிநடத்துவதற்கான தடை மற்றும் தலைமை இணக்க அலுவலரை மற்றும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட வேறு சில திருத்தங்களையும் அரசு பரிசீலித்து வருகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எந்தவொரு சட்டத்தின் கீழும் குற்றங்களை தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரணை ஆகியவற்றை மேற்கொள்ள அரசு நிறுவனத்திடமிருந்து உத்தரவு கிடைத்த 72 மணி நேரத்திற்குள், ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள் வழங்க வேண்டும் .

நுகர்வோர் பாதுகாப்பு (ஆன் லைன் வர்த்தகம்) விதிகள், 2020 முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தளத்தில் (DPIIT) ஈ-காமர்ஸ் நிறுவனங்களை பதிவு செய்யவும் மத்திய அரசு (Central Government) திட்டமிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் (ஜூலை 6, 2021 க்குள்) js-ca@nic.in என்ற மின்னஞ்சலுக்கு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த பரிசீலனைகள் / கருத்துகள் / பரிந்துரைகளை அனுப்பலாம்" என்று நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார் .

ஆன் லைன் வர்த்தகம் (e-commerce) செயல்பாட்டில் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் சங்கங்களிலிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக ஒரு தனி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், வழக்கமாக நடத்தப்படும் இ-காமர்ஸ் தள்ளுபடி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று அமைச்சகம் கூறியது.  குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது அடிக்கடி ஃபிளாஷ் விற்பனையை மேற்கொள்வது, விலைகளை உயர்த்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது போன்ற நோக்குடன் செய்யப்படும் விற்பனை அனுமதிக்கப்படாது.  தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும், நிறுவனங்கள் சட்டம், இந்திய கூட்டு நிறுவன சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை DPIIT விதிகளின் கீழ் தனியாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஈ-காமர்ஸ் தளங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. 

பகிர்வு:  zee news

Sunday 20 June 2021

காலம் மாறிப் போச்சு...

விருந்தே மருந்தாக!   

அண்ணா நகருக்குச் சென்றிருந்த நான் அங்கு வாழும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர, சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு 


 

 வந்திருக்கலாமே என்பதுபோலப் பார்த்தார். ‘‘ நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்..’’ என்று சமாளித்துத் திரும்பினேன்.  விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்று உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்றுவிட்டவர்களைக் கழற்றிவிட்டுப் பல நாட்களாகிறது.  அந்தக் காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்திருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.  எப்போதும் வரலாம்  நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப்படுவார்கள். நகரத்துக்குச் செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்குத் துணி எடுக்கவும், தீபாவளிக்குப் புதிதாக வெளியான திரைப்படம் பார்க்கவும் நகரத்துக்கு வருகிறவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாததால், உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டிச் சொல்லும் வசதிகள் அன்று இல்லை. வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பிப் பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாகச் சமைப்பது அன்றைய வழக்கம்.  வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர் காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் சமையல் மணக்க மணக்கத் தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.  இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண அங்கு நாய்கள்கூடத் தயாராக இல்லை. சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலம் இது. அவர்களையும் அழைத்துக்கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காகப் பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றைப் பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.  பேசுவதெல்லாம் கதை  எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்தக் காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என்று வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம். அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு.  அவர்களுடன் யார் இரவில் படுத்துக்கொள்வது என்று போட்டிப் போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய்த் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்றுடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிற உறவுகள் உண்டு.  வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச்சரக்காகக் கருதப்பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷப் பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் குதூகலம் தரும். இன்று அக்காள், அண்ணனோடு  மட்டும் உறவு முடிந்துவிட்டது.  அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்குக் காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்புதான். கிடைக்கிற இடத்தில் பாயை விரித்துப்படுப்பவர் இப்போது இல்லை. வசதிகளோடு சமரசம்  செய்யத் தயாராக இல்லை.  ஆச்சரியம் இழந்த கண்கள்  இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்துக்கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய்ப் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளைச் சொல்ல கணினி இருக்கிறது. கணினிக் கதைகளில் கரிசனம் இருக்குமா!  பொழுதுபோகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுதுபோதாத தலைமுறை.  உறவு என்பது அன்று இருவழிப் போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குத் தந்தார்கள், ‘அல்ல அவசர’த்துக்கு ஓடி வந்துவிடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது, இன்று கடமையாய்த் தேய்ந்தது.  எனக்குத் தெரிந்து பெரியப்பா  வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதியின்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியைக் கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.  ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்தன. அனுசரித்தும், பொறுத்துக்கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலம் அது.  விதவைத் தங்கையைத் தங்களுடன் வைத்துக்கொண்ட அண்ணன்கள் உண்டு.  இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.   உறவுச் சங்கியில் மாற்றம்  காலாண்டுத் தேர்வுக்கும், முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சிகள் நெரிக்காத விடுமுறை உண்டு.  அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்றுத் திரும்பி வருவார்கள்.  நான் எங்கள் அத்தை வீட்டுக்கு 5-ம் வகுப்பு விடு முறையில் சென்று சதுரங்கம் கற்றேன், நீச்சல் பயின்றேன், தேங்காய் உறிக்கக் கற்றேன்.  இன்று எந்தக் குழந்தை யும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையைவிட்டுக்கூட அகல விரும்புவதில்லை.  அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள்தோறும் விரிசல்கள்.  கை நீட்டும் நட்பு  இன்று உறவுவிட்ட இடத்தை நட்பு பிடித்துக்கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.  இன்று ஆத்ம நண்பர்கள்தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே திருமணத்தின்போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபுரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.  எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தரக் குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது. அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சமிருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.  அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மவுனமாய்க் கற்றுத் தந்துகொண்டே இருக்கிறார்கள்.  - வெ.இறையன்பு  

 நன்றி: இந்து தமிழ் திசை

GOOGLE -ல் தேட வேண்டாம் .. !!

 எச்சரிக்கை :

 வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம் .. !! எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் GOOGLE- ல் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . GOOGLE- ல் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது , பெரும்பாலான தேடல் முடிவுகள் 


 

விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன . இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் , சமீப காலமாக இது தொடர்பான மோசடிப் புகார்கள் அதிகளவில் காவல்துறையில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது . அதாவது , சில மோசடியாளர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் , GOOGLE- ல் மக்கள் இதுபோன்று வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது தங்களது இணையப் பக்கங்கள் முதலில் வருவது போல செய்து விடுகிறார்கள் . எனவே , முதலில் வரும் இந்த இணையப் பக்கத்துக்குள் நுழைந்து , தங்களுக்குத் தேவைப்படும் நிறுவனத்தின் சேவையைப் பெற முனையும் மக்கள் , இந்த மோசடியாளர்களின் எண்களைத் தொடர்பு கொள்வது மோசடிக்கு வித்திடுகிறது . இதுபோன்ற மோசடியாளர்கள் பெரும்பாலும் பஞ்சாப் , ஹரியாணா , உத்தரப்பிரதேசம் , பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் . இவர்கள் , தங்களை தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையின் விவரங்களைப் பெற்று பணமோசடி செய்கிறார்கள் . சில மோசடியாளர்கள் ,தங்களிடம் சிக்கும் நபர்களின் செல்லிடப்பேசியில் தானியங்கி செயலிகளைக் கூட பதிவேற்றி , அதனைக் கொண்டு வங்கி மோசடியை அரங்கேற்றுகிறார்கள் .  எனவே , எந்த விதமான தகவல் குறித்தும் GOOGLE- ல் தேடும் போது , அதில் வரும் இணையப் பக்கங்களின் முன்பாக ஆங்கிலத்தில் ஏடி போன்ற எழுத்துக்கள் இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது .

Saturday 19 June 2021

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ...

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 

 நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 21ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது.

 


 இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

 இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது.  தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதன்படி காய்கறி, பலசரக்கு, மீன், இறைச்சி, ஹார்டுவேர், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு - நான்கு சக்கர பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.  முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 500 என்ற அளவில் உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே 1000ஐ தாண்டியுள்ளது. இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன்) அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 பகிர்வு: தினகரன்

Friday 18 June 2021

ஒரு கிலோ வாழைப்பழம் 3,300 ரூபாய் ..?

கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரியா . !


கொரோனா சூழ்நிலை காரணமாக வடகொரியா கடும் உணவுப் பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஒப்புக் கொண்டுள்ளார் . உள்ளே என்ன நடக்கிறது என்பதே வெளியே தெரியாமல் இருக்கும் நாடு எது என்றால் அது வடகொரியா தான் . வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிய செயற்கைகோள் புகைப்படங்கள் மட்டுமே ஒரேவழியாக இருந்தது . உலகெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் , வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கிம் ஜாங் உன் கூறி வந்தார் . மேலும் வடகொரியாவுக்கு தேவையான உணவு பொருள்கள் , மருந்துகள் அனைத்தும் சீனா வடகொரியா சென்றது .

கொரோனா காரணமாக சீனாவால் போதிய உணவு பொருள்களை வடகொரியாவுக்கு அனுப்பமுடியாத நிலை இருந்து வந்தது . இதை குறிப்பிட்டு வடகொரியா கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார் . கிடைத்த தகவலின் படி அங்கு முதன்மை உணவுப்பொருள்களான சோளம் , அரிசி போன்றவற்றிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் , லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் , இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . அங்கு தற்போது ஒரு கிலோ வாழைப்பழம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  .

 Source : மாலை முரசு

Thursday 17 June 2021

விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்..

 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்


🏆🏆 *2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம்.


 

 https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே இதை செய்ய முடியும்.*

🎖️🎖️ *1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.*

🎭🎖️ *பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம்/பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.*

*இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mha.gov.in-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம். விருதுகள் குறித்த விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx எனும் இணைய முகவரியில் காணலாம்.*

*மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:*

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725968

Wednesday 16 June 2021

மாவட்ட ஆட்சியர்களின் பெயர் பட்டியல் 16.6.2021

 
 தமிழ்நாடு அரசு 
அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்.
 


 


 

Monday 14 June 2021

30 தேதிக்குள் கெடு...

 ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க 30 தேதிக்குள் கெடு.

தற்போது பெரும்பாலானோரிடம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவை உள்ளது. 

 


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. அதற்கு விதிக்கப்பட்ட கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜுன் 30ம் தேதி என அறிவிக்கப்பட்டது. எனவே, பலரும் இரண்டையும் இணைத்து வருகின்றனர்.

ஜூன் 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஜூலை 1ம் தேதிக்குள் பின் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். மற்றும் வேறு பல பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க நேரிடும். இருசக்கர மற்றும் மற்ற வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. வங்கியில் கணக்கு துவங்க முடியாது. கிரெடிட்/டெபிட் விண்ணப்பிக்க முடியாது.

 ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்த முடியாது. அதேபோல் ரிசர் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பத்திரங்கள் வாங்க முடியாது.

Source :  cini reporters.

இந்திய ரூபாயின் மதிப்பு இப்படியா...

 இந்திய ரூபாயின் மதிப்பு 1947 முதல் 2020 வரை ஒரு பார்வை..

 


  1 USD to INR Rates From 1947 to 2020
Year    Exchange rate(INR per USD)
1947                     3.30
1949                     4.76
1966                     7.50
1975                     8.39
1980                     7.86
1985                   12.38
1990                   17.01
1995                   32.427
2000                   43.50
2005(Jan)          43.47
2006 (Jan)         45.19
2007 (Jan)         39.42
2008 (Oct)         48.88
2009 (Oct)         46.37
2010 (22 Jan)    46.21
2011 (April)        44.17
2011 (21 Sep)    48.24
2011 (17 Nov)    55.39
2012 (22 June)    57.15
2013 (15 May)    54.73
2013 (12 Sep)    62.92
2014 (15 May)    59.44
2014 (12 Sep)    60.95
2015 (15 Apr)    62.30
2015 (15 May)    64.22
2015 (19 sep)    65.87
2015(30 nov)    66.79
2016(20 Jan)    68.01
2016(25 Jan)    67.63
2016(25 Feb)    68.82
2016 (14 Apr)    66.56
2016 (22 Sep)    67.02
2016 (24 Nov)    67.63
2017 (28 Mar)    65.04
2017 (28 Apr)    64.27
2017 (15 May)    64.05
2017 (14 Aug)    64.13
2017 (24 Oct)    64.94
2018 (9 May)     64.80
2018 (Oct)         74.00
2019 (Oct)         70.85
2020 (Jan)         70.96

Source :  oneindia

14 வகை பொருட்களை தெரிஞ்சுக்கோங்க..

 14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு

Wednesday 9 June 2021

ஏற்காடு சுற்றலாம் வாங்க...!

 தமிழ் டிரெக்கர் - காணொளிகள்  1

ஏற்காடு - தமிழ்நாடு

Monday 7 June 2021

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

 வங்கி வாடிக்கையாளர்கள் ..

 


   வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம்   முழு ஊரடங்கு நீட்டிப்பு - வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.   நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இரண்டு வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. “வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம். இது உங்கள் அவசர வங்கி தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டணமில்லா எண்ணை 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ அழைக்கவும்” என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது.  கனரா வங்கி வாடிக்கையாளர் சேவைக்காக 1800 425 0018, 1800 208 3333, 1800 103 0018, மற்றும் 1800 3011 3333 என்ற பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கி சேவைகளைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு வராமல் இணையவழி சேவையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.  பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் சேவைக்காக 1800 1213721 மற்றும் 1800 1037188 என்ற வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களையும் பாங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பணத்தை பெறுவதற்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து. பாதுகாப்பான முறையில் உங்கள் பணத்தை இணையவழியில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளது  பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர் சேவைக்காக 1-800-180-2222 மற்றும் 1-800-103-2222 என்ற எண்களை வழங்கியுள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இணைய வழியில், காசோலை புத்தகம், கட்டண ஆர்டர்கள், வரைவு, வாழ்க்கை சான்றிதழ், டி.டி.எஸ் / படிவம் 16 சான்றிதழ், 15 ஜி / எச் படிவங்கள் மற்றும் கணக்கு அறிக்கை போன்ற வசதிகளை பெறலாம் என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் பெயரில் எத்தனை தொலைபேசி...?

 

 உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி...

 


கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று,  உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கிடைக்கும் OTP-யை உள்ளிட்டால், உங்கள் பெயரில் எத்தனை அலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருக்கின்றது என்று அறிவிக்கும்.  உங்களுக்கு  தெரியாத அலைபேசி எண் இருந்தால், அவற்றை குறிப்பிட்டு “This is not my number’ என்று தேர்வு செய்து “Submit’ செய்தால், உங்களுக்கு ஒரு Ticket ID Ref No. வரும். அதை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.  (கைவசம் இருக்கும் அலைபேசி எண்ணை, அந்த தளத்தில் “This is my number. Required' என்று உள்ளிட அவசியமில்லை). தங்கள் உபயோகத்தில் இல்லாத எண்ணை மட்டும் குறிப்பிடவும்)
.
உங்களுக்கு தெரியாமல், உங்கள் அடையாள அட்டையை கொண்டு யாராகிலும் அலைபேசி எண் வாங்கியிருந்தால், உடனே அவற்றை இந்த முறையில் தொலைதொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் பெயரில் உள்ள அந்த எண்ணின் உபயோகத்தை நீக்க முடியும். இந்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இந்த சேவை மிகவும் பாரட்டத்தக்கது.  காலம் தாமதிக்காமல், உங்கள் உபயோகத்தில் உள்ள அலைபேசி எண்களை சரி பார்த்து கொள்ளவும்.
.
https://tafcop.dgtelecom.gov.in

Saturday 5 June 2021

கோதாவரி முதல் காவேரி நதிகள் இணைப்பு

 

 

 

 

 

 

கோதாவரி , காவேரி நதிகள் இணைப்பு 



மத்திய அரசு ஒரு அறிக்கை செய்து அனுப்புயுள்ளது தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு   கோதாவரி முதல் காவேரி நதிகள் இணைப்பு அப்ரூவல் ஆனது  இதன் மொத்த  பட்ஜெட். 85,000cr. தூரம். 1100 கி.மீ. 19 சுரங்கங்கள்.  நன்மை.  தமிழகத்துக்கு 250 டி.எம்.சி. தண்ணீர். சென்னை நகரம்—25 டி.எம்.சி. தற்போதைய தேவ்வ—12 டி.எம்.சி. மேட்டூர் அணை சேமிப்பு திறன்—90 டி.எம்.சி.  திட்ட காலம்—5 ஆண்டுகள். பிரதான நன்மை—தமிழ்நாடு.  இதற்காக முன்னால் முதல்வர் ஈ பி எஸ் பிரதமருக்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். 

தடுப்பூசி சான்றிதழ் வேண்டுமா...

தடுப்பூசி சான்றிதழ் பெற வேண்டுமா..

 


 

அரசின் இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ளீடு செய்தால்  one time password  உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவிட்டால் நாம் தடுப்பூசி போட்ட விவரங்கள் வரும் அதை screenshot எடுத்துக் கொள்ளலாம். மேலும் அதை pdf ஆகவும் தரவிறக்கம் செய்யலாம்.

கறி சோறு...

சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட...

 மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு , கோழிகள் வளர்ப்பார்கள்...இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது...



கிராமங்களுக்குச்சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்...கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்...கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட...வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில் , வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட...

அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன , தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம்...ஆனால் அப்படிச்செய்ததில்லை.. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை...அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை...

வராத விருந்தாளிகள் [ குறிப்பாக மருமகன் ] வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள்.. அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து ரொம்பவும் தொந்தரவு செய்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக்கொடுப்பார்கள்...அவ்வளவே...

அய்யன் போன்ற சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு

சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி... மற்றபடி , ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம் , அல்லது அவரவர்கள் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கான நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்...

உற்றார் உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப்போனது போக மீதமிருக்கும் கறியை [ பெரும்பாலும் தொடைக்கறியை ] தனியாக எடுத்து உப்புக்கண்டம் போட்டு . கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்வார்கள்.. மழைக்காலங்களில் ஆற்று மீன் கடல் மீன் குளத்து மீன் கிடைக்காதபோது அதுதான் பிரதான உணவு...

கொங்குப்பகுதியைப் பொறுத்தவரை அசைவ உணவு சமைப்பதும் உண்பதும் சற்று ஆச்சாரக்குறைவான விஷயமும் கூட...கல்யாணம் , சீர் , வளைகாப்பு இப்படி எந்த விசேஷத்திலும் அசைவ உணவு கிடையாது...துக்க வீடுகளிலும் அப்படித்தான்...பதினாறாம் நாள் காரியம் உட்பட எதிலும் அசைவ உணவு கிடையாது...

அவ்வளவு ஏன் , அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள்... பெறால் சட்டி என்று அழைக்கப்படும் மேற்படி பாத்திரங்களை பிறநாட்களில் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள்... பொடக்காளி என்று அழைக்கப்படும் குளியல‌றையில் [ வீட்டை ஒட்டி ஒரு ஓரமாக தென்னை அல்லது பனை ஓலைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட [ ஒதுக்கு என்பார்கள்] ...அமைப்புதான் பொடக்காளி - புழக்கடை என்பதன் மரூஉ ] ஒரு ஓரமாக கவிழ்த்து வைத்திருப்பார்கள்.. அசைவ சமையலுக்கு பயன்படும் அகப்பை அந்த ஓலைப்படலில் சொருகப்பட்டிருக்கும்... அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாக கழுவி எடுத்துப்போய் பொடக்காளியில் வைத்துவிடுவார்கள்.. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச்சாணம் போட்டு மெழுகிய [ வளிச்சு உடறது ] பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்...

மிக சமீபகாலமாக மக்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் என்னை வியக்கவைக்கிறது... ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது... கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது... திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள்...

பெரும்பாலான பெரிய ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக்கடை தான் இருக்கும்....இன்று அதன் எண்ணிக்கை பலமடங்கு...

கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக்காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டது...

[ திருப்பூர் மாவட்டம் - கன்னிவாடி ] ஆட்டுச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று... இருபது வருடங்களுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை... சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆந்திராவிலிருந்து தான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது அங்கு மட்டும் என்ன இதேநிலைதான் உற்பத்தி குறைவு.. கோழிகளைப்போல ஆடுகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை...

பின் நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? அத்தனையும் சுத்தமான , சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?

அப்புறம் அவன் கிடைக்கும் எல்லாக் கறியையும் கலந்து விற்கத்தான் செய்வான்.. நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள் , கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள்.....

கறியில் கலக்கப்படும்...எக்கச்சக்கமான மசாலாக்கள் , நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது...

தப்பிக்க ஒரே வழி... குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்...

சிந்திப்பது... நம் கடமை.

தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்தும் நாடு..

 உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

 




தமிழ் எண்கள்
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

Friday 4 June 2021

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு

 "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு

இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.



http://cmcell.tn.gov.in/register.php
 

என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள

புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

http://cmcell.tn.gov.in/login.php


தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell ,

Secretariat, Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764

Fax Number : 044 - 2567 6929

E-Mail : cmcell@tn.gov.in