வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Thursday 25 August 2011

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்...?

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்
    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளனஅவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

Monday 22 August 2011

உங்கள் முதல் அடி எப்போது?

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  •  பின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன?’, 'ஏன்?’, 'எங்கே?’, 'எப்போது?’, 'எப்படி?’, 'யார்?’.

  • உங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்!

  • ஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான் கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப் பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10   சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்!

  • எல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான்! அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்!

  • எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

  • 100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்!

  • ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்!

  • இந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்!

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  • எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

  • அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்!

  • அலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்!

  • உங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்!

  • நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்!   

  • டோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது!’

  •  அதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.
உங்கள் முதல் அடி எப்போது?

ஒரு கேள்வி ...?

பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.

உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். "நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?" மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்!

கொடுங்கள்... பெறுவீர்கள்..!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது, தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்துக்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு; விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை... நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே, எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விதியை வென்ற விடாமுயற்சி

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை
இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை
இழக்க முடியவில்லை.

அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள்
சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.

பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.

சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.

மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக்
குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.

முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.

மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.

நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.

உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.

மனதோடு போராடாதீர்கள்!


உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

முயற்சி செய்து பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நீங்கள் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காதவராய் இருக்கலாம். ஆனால் இனி அரை மணி நேரத்திற்கு அதை நினைக்காமல் இருப்பது சுலபமான விஷயமல்ல.

மனம் விசித்திரமானது. எதையும் நினைக்க வேண்டாம் என்றோ, மறந்து விடு என்றோ கட்டளையிட்டு சாதித்துக் கொள்வது சுலபமான விஷயம் அல்ல. கட்டளைகளை மதித்து அப்படியே பின்பற்றும் பழக்கம் மனதிற்குக் கிடையாது.

நிறைவேறாத காதலுக்குப் பிறகு காதலியை அல்லது காதலரை மறக்க முனையும் காதலர்களுக்கு அது தெரியும். ஒரு பலவீனமான பழக்கத்தைப் பழகிக் கொண்ட பின் விட்டொழிக்க முடிவு செய்யும் மனிதர்களுக்கு அது தெரியும். குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியோர்கள் கூட சமயங்களில் மனத்தை அடக்கப் போராடியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமனே கூட யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டரிடம் புலம்புகிறான்...

"அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம்; மேரு மலையை பெயர்த்து எறிந்து விடலாம்; சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம்; ஆனால் மனத்தை அடக்குதல் எளிதல்ல."

அப்படியானால் இந்த மனதை எப்படித் தான் வெல்வது? ஆன்மீக சித்தாந்தங்களுக்குப் போகாமல், நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய வழி ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது. முதல் அறிவுரை மனதோடு போராடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். அதனுடன் போராடப் போராட பலம் பெறுவது மனமே; தளர்ச்சியடைவது நீங்களே.

போராடுவதற்குப் பதிலாக உங்கள் மனதிற்குப் பற்றிக் கொள்ள வேறொன்று கொடுங்கள். குழந்தை கையில் இருந்து ஒரு பொம்மையை வாங்கி அது அழ ஆரம்பிக்கும் முன் இன்னொரு பொம்மையைத் தருகிறோம் அல்லவா? அதைப் போல் தான். அந்த இன்னொரு பொம்மையும் ஏதோ ஒன்றாக இருக்காமல் குழந்தை ரசிக்கும்படியான பொம்மையாக இருக்க வேண்டும். குழந்தையின் கவனம் அதில் திரும்பும். குழந்தையின் தொந்திரவு இருக்காது.

மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம். சாதாரண மனிதர்களுக்கு அது மிகக் கடினமே. ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள். தானாக அந்த வேண்டாத எண்ணம் உங்களுக்குள் வலு இழக்கும். இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.

இன்னொரு அறிவுரை மனதோடு வாக்குவாதமும் செய்யாதீர்கள். மனம் ஜெயித்து விடும். என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு குடிப்பழக்கம் போன்ற ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொள்ள எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாய் ஒரு வீதியில் ஒரு கடையில் மதுவை வாங்குவீர்களேயானால் அந்த வீதியில் அந்தக் கடை வரும் போது உங்களை உந்த மனம் ஆயிரத்தெட்டு காரணங்களை வைத்திருக்கும். நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான செயல் என்ன தெரியுமா? மனம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து அந்தக் கடையைக் கடப்பது தான். மனதின் பேச்சுக்கு கொஞ்சம் காது கொடுத்தீர்களானால், லேசாகத் தயக்கம் காட்டினீர்களானால் நீங்கள் தர்க்கிக்க முடியாத பல வாதங்களை உங்கள் முன் வைத்து மதுவை வாங்க வைத்து தான் மறு வேலை பார்க்கும். மனம் நீங்கள் கடையைக் கடந்து விட்டால் கூட திரும்பி வரச் சொல்லும். நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்திற்குச் சென்று விடும் போது தான் மனம் தன் முயற்சியைக் கைவிடும்.

எனவே மனதோடு போராடாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். எது நல்லது என்பதை மட்டும் உறுதியாக அறிந்திருங்கள். தீய எண்ணமானால் நல்ல எண்ணத்திற்கு உடனடியாக மாறுங்கள். தீய செயலுக்குத் தூண்டுதலானால் உடனடியாக அந்த சூழ்நிலையை விட்டு நகருங்கள். மனதைப் பொருட்படுத்தாமல், அதனுடன் வாதிட்டு நிற்காமல், நேரம் தாழ்த்தாமல், தயக்கமில்லாமல் அந்த நல்லதை செயல்படுத்துங்கள். மனதின் அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த முதல் வினாடியிலேயே நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். காலம் தாழ்த்தினால் தோல்வியும் நிச்சயம்.

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

  • ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.

  • முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !

  • உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !

  • முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.

  • காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

  • போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.

  • எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.

  • மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

  • தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.

  • செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.

கொடி இடை வேண்டுமா ?

இன்றைய பெண்களின் கவலைக்குரிய பிரச்னை வயிறும் இடுப்பும் ‘புசுபுசு’ என்று பெருத்துப் போவது!
வெறும் வாணலியைச் சூடு செய்து, அதில் கைப்பிடி அளவு சோம்பைப் போட்டு, புரட்டுங்க. மிக்ஸியிலிட்டு பொடிச்சுக்குங்க. அரை லிட்டர் தண்ணியிலே போட்டு, நன்றாகக் கொதிக்க வெச்சு வடிச்சு, அடிக்கடி குடிச்சாலே தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
கைப்பிடியளவு பார்லியை நாலு மணி நேரம் ஊற வெச்சு, இரண்டு தம்ளர் நீரில் வேக வெச்சு, அந்தத் தண்ணீரைக் குடிச்சுட்டு வந்தாலும், கொழுப்புத் தசைகள் கரையும்.
தொப்பை மட்டுமல்ல, உங்க உடம்பே வாகாக இளைக்கணும்னா தினமும் காலையிலும் மாலையிலும், குனிஞ்சு நிமிருங்கள் வீட்டு ஹாலில் வரிசையாக பத்து கர்ச்சீப்புகளை போட்டுவிட்டு, குனிந்து எடுத்து பயிற்சி போல செய்யுங்க. குறிப்பாக உங்களுடைய அபிமான டீ.வி நிகழ்ச்சியின் போது செய்தால், டூ இன் ஒன் பலன் கிடைக்கும்!
ஃப்ரெஷ் சாலட் உங்களுக்குக் கை கொடுக்கும். குடைமிளகாய், மாதுளம்பழம், ஆப்பிள், உலர் திராட்சை, வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக்கி ஆலீவ் ஆயில், எலுமிச்சை சாறு போட்டு ஊற வைக்கவும். மதிய உணவின்போது ஒரு பெரிய கப் நிறைய சாலட்டையும் இரண்டு சப்பாத்தியையும் மட்டும் சாப்பிடவும். கண்டிப்பாக ஆறே மாதங்களில் செல்லத் தொப்பை காணாமல் போய், முல்லைப்பூ போல இருப்பீங்க!

தேவை

: வெள்ளரி விதை - 100 கிராம்,

சந்தனப் பவுடர் - 10 கிராம்,

வெட்டி வேர் - 25 கிராம்


உபயோகிக்கும் முறை:

வெட்டி வேரை, சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் ‘மொறு மொறு’ என்று உலர்த்தவும்.

அத்துடன் வெள்ளரி விதை, சந்தனப் பவுடர் சேர்த்து, மிக்ஸியில் பொடி செய்யவும்.

ராத்திரி இரண்டு ஸ்பூன் வெட்டி வேர் பவுடரை, தண்ணீரில் குழைத்து, வயிற்றில் தடவிக் கொண்டு படுக்கவும். வயிற்றின் தொள தொள சதைகள் நாளடைவில் இறுகி, புதுப் பொலிவுடன் இருக்கும்.

Sunday 21 August 2011

பாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்…)



எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.



இரண்டு பேருமே வியாபாரிகள்… ஒருவள் ஜக்கெட் பிட்களை 20 வருடங்களுக்கு முன்பு வெயிலில்  விழுப்பரம் தெருக்களில் ஜாக்கெட்பிட்டே என்று கூவி விற்றவள்.

அப்பாவின் சித்தி கடலூர் லாரன்ஸ் ரோட்டில் 20 வருடத்துக்கு முன் இலைவியாபாரம் செய்து வந்தவள். இருவருமே வியாபாரிகள் என்பதால் அவர்கள் இடுப்பில் வைத்து இருக்கும் சுருக்கு பையில் எப்போதும் சில்லரைகள்  வியாபித்து இருக்கும்.
சில்லரைகள் எப்படியாவது ஐஸ் வைத்து  பாட்டியிடம் இருந்து வாங்கி அதில் உண்டை வாங்கி தின்பதுதான்  அப்போதைய எங்களது முக்கிய பொழுது போக்கு.

பாட்டி இரவு தூங்கும் போது அதில் இருக்கும் சில்லரைகள் எடுத்து காலையில் மஜாவாக சோன்பப்படி கேக் வாங்கி சாப்பிடுவதும், தேன் முட்டாய் வாங்கி, தேன் குறைவாய் இருப்பதற்க்கு வருத்தபட்டு அழுது புலம்புவதும் ரொம்ப பிடித்தமான ஒன்று.

அப்போது எல்லாம் பத்துபைசா இருபது பைசாவைவிட  எனக்கு நாலனா எட்டான மீதுதான் எனக்கு ஆர்வம்..அப்போது எல்லாம் ஒரு ரூபாய் என்பது எனக்கு 100 ரூபாய் கிடைத்த பேரானந்தம். இப்போதும் நகர்புற,கிராமபுற ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் ஒரு கிலோ அரிசி ஆசிர்வாதம்தான்.
பாட்டியிடம் எப்படியாவது ஆட்டைய போட்டு, ஐஸ் வைத்து சுருக்கு பையை, சுருக்கிய வயிற்று பகுதியில் இருந்து எடுத்து அதில் கீழ் பக்கம் விரல்களால் முட்டு கொடுத்து சுருக்கு பையில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு போட்ட விரல்களுடன் சில்லரைகளை தேடும் போதும், விரைவாக தேடும் போது சுருக்குபையின் உள்ளே பொங்குவது போலவும் இருக்கும்.


அது பொங்கி கொண்டு இருக்கும் போது அதில் வெற்றிலைகாம்பு, கொட்டை பாக்கு, இரண்டுரூபாய். ஒரு ரூபாய்,ஐந்துரூபாய் என  நான்காய் மடித்து வைக்கபட்ட தாள்கள், சாமி பிரசாத விபூதி குங்கும பொட்டலங்கள், சின்ன பாலிதீன் பைகளில் மடித்து வைக்கபட்ட நகைகடை அடகு சீட்டு என வந்து போகும்… அவ்வப்போது சில சில்லரைகளும் வந்து போகும்…
கிழவிகள் ரிலாக்சாக உட்கார்ந்து இருக்கும் போது காசு கேட்டால் நன்றாக புதையல்  தேடுவது போல் தேடி,சுருக்குபையில் இருந்து பத்து பைசா தூக்க முடியாமல் தூக்கி  கொடுப்பார்கள். இதுவே அவசரமாக கிளம்பும் போது காசு கேட்டால், சட்டென சுருக்கு பையை தூழாவும் போது கையில் கிடப்பதை கொடுத்து விட்டு போவார்கள்.. அதிஷ்டம் இருந்தால் நமக்கு அந்த நேரத்தில் ஒரு ரூபாய் கூட கிடைக்கும்.

சுருக்குபைகள் பல கலர்களில் இருக்கும்.  அந்த கயிறு முனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து  இருப்பார்கள்.. அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள். கால் கவுலி வெற்றிலை,இரண்டு ரூபாய்க்கு மண்பாக்கு  வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் அக்கிக்கொண்டே இருப்பது என் பாட்டியின் பொழுது போக்கு.

கிராமபுற கோவில் திருவிழாக்களில் இரண்டு சுருக்கு பை  வாங்கி வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒன்று என்று மாற்றிக்கொள்வார்கள். வாழை வியாபாரம் செய்யும் பாட்டியின் சுருக்குபை வாழைகறைகள் ஏறிக்கிடக்கும். விபரம் தெரியாத போது அது அழுக்கு பை, கப்பு நாத்தபை என்று ஏளனம் செய்து இருக்கின்றேன். உழைப்பின் அருமை இப்போது தெரியும் போது அந்த வாழைகறை ஏறிய சுருக்குபையின் வாசம்   பிடிக்க இப்போது  மனது ஏங்குகின்றது. அதே போல் ஒரு மண் பாக்கு ஸ்மல் அடித்துகொண்டே இருக்கும்.

சமீபத்தில் சைதாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பெரிய கறுப்பு நிற  இடுப்பில் அழுக்கு பாவாடையில் ஒரு நரிக்குறவ பெண் ஒருத்தி சுருக்குபை  மாட்டி இருந்ததை பார்த்தேன்.


சுருக்குபை வைத்து இருந்த பாட்டிகள் ரொம்பவும் வெள்ளந்தியாக இருந்தார்கள். எல்லாக்குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதான். பக்கத்து வீட்டு குழந்தையாக இருந்தாலும் தாங்கள் வாங்கி வந்த தின்பண்டத்தில் பாதியை பகிர்ந்து அளிப்பார்கள். ஆனால் இப்போது உள்ள பாட்டிகள்   அப்படி இல்லை , பக்கத்து விட்டு பையனை விடுங்கள் குடும்பத்தித்தினுள்ளே மகள் குழந்தை மகளின் நாத்தனார் குழந்தை என பேதம் பார்க்கபடுகின்றது. இவைகளுக்கு சிரியலும் ஒரு காரணம்.

எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் எந்த பாட்டியும்  இப்போது சுருக்குபை வைத்துக்கொள்வது இல்லை. பைக்கு பதில் மார்டன் பாட்டிகள், ஜாக்கெட்டினுள் தொங்கிய மார்பு  இடைவெளிகளில் பர்ஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது.  பேருந்தில் பர்ஸ் எடுக்கும் முன் கண்டக்டருக்கு முதுகு காட்டி பர்ஸ் எடுத்து பிரித்து, சில்லரை எடுத்து கொடுக்கின்றார்கள்.  நாம்  கவனிப்பதை பார்த்து விட்டால் பாட்டிகளின் உதட்டில் சிறு புன்னகை பூக்கின்றது.  தாத்தாக்களின் காம பார்வையில் தாங்கள்  சிக்கிய அந்த காலத்து ஞாபகங்கள் போல அந்த புன்னகை தெரிவிக்கினிறது.

இப்போதும் சுருக்குபை பற்றி நினைக்கும் போது, அந்த ஆள்காட்டி சுண்ணாம்பு விரல்கள் சுருக்குபையினுள் சில்லரை தேடும் காட்சி நினைக்கும் போது அந்த உழைப்பாளி பாட்டிகளுக்கும் எப்போதும் சுடு மூஞ்சியை காட்டாத அந்த பாட்டிகளுக்கு எனது ராயல் சல்யுட்.

டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..



எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் கிராமபோனில் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்…. அப்போது சீத்தாபதி என்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு அப்படி   சத்தமாக போட்டு எங்கள் கிராமத்து காதை கிழித்து தொங்கவிட்டனர்…..

அதன்பிறகு நான் ரசித்த பாடல் டாலிங் டார்லிங் ஐலவ்யூ என்னை விட்டு போகாதே.. என்ற பிரியா படத்தின் பாடல்கள்தான்...   எங்கள் ஊரில் எந்த வீட்டில விசேஷம் என்றாலும் அங்கு சவுண்ட் செட் போடும் இடத்தில் போய் நிற்போம்… அப்படி ஒரு ஆர்வம்….
ஒருமுறை முழு ஆண்டு பள்ளி விடுமுறைக்கு, நான் என் ஆயா வசித்த விழுப்புரத்துக்கு போனேன்… அங்கு மந்தகரையில் உள்ள அமைச்சார் கோவில் நிர்வாகி பழனிபிள்ளை என்பவர் வீட்டில் முதல் முதலாக டேப்ரிக்கார்டரை பார்க்கின்றேன்…

அவர்கள் வீட்டில் எப்போதும் தாய்வீடு படத்தில் வரும் ஜாஹோ.. ஜாஹோ உன்னை அழைத்தது கண்... உறவை நினைத்தது பெண் என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்பார்கள்..  அதே பாடலை நனும் திரும்ப திரும்ப கேட்க அந்த டேப்ரிக்கார்டர் மேல் எனக்கு மெல்ல காதல் பிறந்தது… பிற்காலத்தில் எனக்கு மென்மையான பாடல்கள் பிடிக்காமல் வெஸ்டர்ன் இசை அதிகம் பிடிக்க இதுதான் முதல்  காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றறேன்….


அதன் பிறகு என் அத்தை வீட்டில் தக்காய் கம்பெனியின் பெட் செட்  ஒன்று இருந்தது.. அதில் அன்பேவா படத்தில் வரும் ஒரு டயலாக்…. என்னது கஷாயமே தான் என்று நாகேஷ் சொல்ல சரோஜாதேவி  யாருக்கு என்று கேட்க??? நகேஷ் பாலுவுக்கு என்று சொல்லும் அந்த இரண்டு வார்த்தையை மட்டும், ஒரு ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்போம்…

யாருக்கு பாலுவுக்கு.. யாருக்கு பாலுவுக்கு என்று விடாமல் கேட்டு கேட்டு சிரித்துக்கொண்டு இருப்போம்….ஒரு கட்டத்தில் அந்த பிளே பட்டன் மற்றும் ரிவைன்டிங் பட்டன் எல்லாம் எங்கள் மீது காரி துப்ப தொடங்கிவிட்டது… 

குணா படம் அதில் கடிதம் பாடலில்  கமல் ஒரு முக்கு முக்கு விட்டு ம்ஹும் இது மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல  என்று சொல்லும் அந்த இடத்தில் முக்கும் இடத்தை மட்டும் தனியாக கேட்டு பாருங்கள்…. காலையில் ஆய் வரவில்லை என்றால் முக்குவது போல் அந்த சவுண்ட் இருக்கும்… அதையும் சலிக்க சலிக்க ரிவைண்ட் செய்து கேட்டு கேட்டு சிரிபோம்... அது ஒரு அழகிய காலம்...

நான் தனியாக அது போலான ஒரு தக்காய்  பெட் செட் வாங்கி சொந்தமாக 30 ரூபாய்க்கு ஒரு ஆடியோ கேசட் வாங்கி நான் கேட்ட முதல் பாடல் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையதட்டுதான்…ஏ பக்கத்தில் தளபதி பி பக்கத்தில் சேரன்பாண்டியன்… அதில்  கண்கள் ஒன்றாக கலந்ததோ.. என்ற பாடல் அதிகம் கேட்டு இருப்பேன்…
அதன் பிறகு லோக்கல் ஆடியோ கேசட்டில் இரண்டு படங்கள் காமினேஷனில் வாங்கி கேட்பேன்…

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தேன்…

பிரம்மாபடத்தில்…. குஷ்பு பாடும்  இவளொரு  இளங்குருவி,அமரன் படத்தில் ஸ்ரீ வித்யா பாடும் பாம்பாயி பாலா என்ற குத்து பாட்டு என அது போல் மாற்றி மாற்றி பல பாடல்கள் ரெக்கார்ட்செய்து வைத்து இருந்தேன்… இதில் என்ன கொடுமை என்றால் அவ்வப்போது சிக்கி எல்லா நல்ல பாடல்களும் வீணாகிவிடும்.. கேசட்டை இரவல் வாங்கி செல்பவர்களும் அதனை ஒழுங்காக திரும்ப தரமாட்டார்கள்..


கடலூர் டூ பாண்டி செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் நிச்சயம் இளையராஜா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும்…  காரணம் நல்ல பேஸ் வைத்து பேருந்து கடக்கும் போது கும் கும் என்று சத்தம் வெளியில் கேட்கும்…

மிக முக்கியமாக…தெய்வவாக்கு படத்தில் வரும், வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் என்ற இளையராஜா பாடலை கேட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும்… பேருந்தை ஒட்டிக்கொண்டே ஒரு கையால் கேசட் முடிந்ததும் திருப்பி போட டிரைவர் முயற்ச்சி செய்யும் போது எல்லாம் அல் இல்லாமல் பயணிப்போம்… இருந்தாலும் பாடல் முக்கியம் அல்லவா???

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்….

சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை….

மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை…..

வெகு நாட்களுக்கு பிறகு என் கல்லூரியில் ஸ்டாப்புகளுக்கு மட்டும் ஒரு பங்ஷன் நடைபெற்றது.. அதில் எதாவது ஒரு திறமையை வௌபடுத்த வேண்டும் என்ற அன்பு கட்டளையை பிரின்சிபல் போட… எல்லோருக்கும் அதனை வழி மொழிவதை தவிர வேறு வழியில்லை….

நான் பாடல் பாடுகின்றேன் என்று சொல்லி விட்டேன்…. எனக்கு முன்பு பாடிய அட்மினில் இருக்கும் அக்கவுண்ட் பெண்மணி, அழகிய அசுர அழகிய அசுரா என்று ஓப்புவித்து விட்டு போனார்… நான் போனேன்..காதலனும் காதலியும் தனிமையில் இருக்கும் போது பேச நிறைய விஷயங்கள் இருக்கும் போது சமுகத்தினை பற்றி யோசிக்கும் இந்தபாடல் என்னை மிக கவர்ந்த பாடல் என்று இன்ட்ரோ சொல்லி விட்டு…. அழகன் படத்தில் வரும் ஜாதிமல்லி பூச்சரமே என்ற பாடலை பாடினேன்….

ஜென்ஸ் ஸ்டாப்களில் நான் சிறந்து பாடியதாகவும்… அந்த அழகான இன்ட்ரோவுக்காகவும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள்….எனக்கு ஆர்வத்தோடு கலர் கவரை  பிரித்து பார்த்து விட்டு, வெறுத்து போய்விட்டேன்…. அதை தூக்கி போடவும் எனக்கு விருப்பம் இல்லை… காரணம் எனது 32 வருட வாழ்க்கையில் பலர் முன்னிலையில் கைதட்டலோடு நான்  வாங்கிய முதல் பரிசு அது…..

அந்த பரிசு… சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் அதனை டேப்ரெக்கார்டரில் மட்டுமே போட முடியும்… இன்னமும் தூக்கி போட மனமில்லாமல் சீல் உடைக்கபடாமல் சிவாஜிதபாஸ் என்ற வாசகத்தோடு ரஜினி நின்று கொண்டு இருக்கும்,அந்த ஆடியோ கேசட் என் வீட்டில் இன்னும் பத்திரமாக இருக்கின்றது….

கிராம போன் - கால ஓட்டத்தில் ..







அந்த சாதனம் ஒரு திருமணவிழாவில் அறிமுகம் ஆயிற்று....அதன் பேர் கூட எனக்கு தெரியாது.... வட்டமாக சுற்றும் ஒரு கறுப்பு தட்டில் இருந்து பாடல்கள் கேட்கின்றன... அது எப்படி? என்று மண்டை குழம்பிய நாட்கள் அவை...

முதன் முதலில் அதனை பார்த்த போது அது எனக்கு ஒரு கதை சொல்லியாகத்தான் அது எனக்கு அறிமுகமாயிற்று...மூன்றாம் பிறை படத்தில் வரும்... முன்ன ஒரு காலத்துல... முருங்கை மர காட்டுக்குள்ள.. என்ற கதையைதான் நான் முதன் முதலில் அதில் கேட்டேன்.. இன்னும் கூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது... எங்கள் ஊரில் சீத்தாபதி என்ற உறவினரின் திருமணத்துக்கு மைக் செட் வைத்து பாட்டு போட்டார்கள்.. அப்போதுதான்... அது எனக்கு பரிட்சியம்..

அது வட்டமாக ஒரே வேகத்தில் சுற்றுவதை இமை கொட்டாமல் ரசித்த பார்த்து கொண்டே இருந்து இருக்கின்றேன்... அப்படி கூட்டமாக அதனை சூழ்ந்து கொண்டு பார்க்கும் பிள்ளைகளை விரட்டுவதே முழு நேர தொழிலாக மைக் செட் போடுபவர் வைத்துக்கொண்டு இருப்பார்... வடாம் காய வைத்து விட்டு காக்காய் விரட்டுவது போல் இருக்கும் அந்த காட்சி...

பார்க்கும் பசங்களும் சும்மா இருக்க மாட்டார்கள்... ஓடுவதை நிறுத்தினால் என்னாகும் என்பதை சோதிக்க சட்டென ஓடும் பிளேயரை கை வைத்து மைக் செட் போடுபவரின் வயிற்றில் கிலி ஏற்படுத்துவார்கள்..

அதன் பிறகு அது எல்லார் வீட்டு விசேஷத்துக்கும் தாய் மாமன் முறை செய்ய வருகின்றாரோ இல்லையோ???.. மைக் செட் முதன் முதலில் விசேஷ வீட்டில் தன்னை முன்னிறுத்தி கொள்ளும்...

எங்கள் ஊரில் ஆனந்தன் சவுன்ட் சர்விஸ் என்று ஒரு மைக்செட் கடை இருந்தது... அவர்களுக்கு வேலை இல்லாத போதும் அல்லது புதிய ரெக்கார்டு வாங்கி வந்த போதும் அதனை டெஸ்ட் செய்ய ரோட்டில் இரண்டு பெரிய புனலை கட்டி ஊருக்கே பாட்டு போடுவார்கள்....

திருவிளையாடல் ,சரஸ்வதி சபதம் இந்த இரண்டு படத்தின் உரையாடல் தொகுப்பை மார்கழி மாதத்தில் விநாயகருக்கும்,முருகனுக்கும், அம்மனுக்கும் சலிக்க சலிக்க புனலை வைத்து விடியலில் 4,30மணிக்கு தினமும் போட்டு விடுவார்கள்....

அதன் பிறகு தேய்ந்த ரிக்கார்டாக இருந்தால் ஒரு வரியை திரும்ப திரும்ப கத்திக்கொண்டு இருக்கும்... எங்கள் ஊரில் திருவிளையாடல் டயலாக்கில் விறகு வாங்கலையோ விறகு... இந்த வரி வந்தால் அது சண்டித்தனம் செய்யும் அதே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும்.. அந்த இடத்தில் மைக் செட்காரர் அருகில் இருந்தால் அந்த முள்ளை சட்டென அந்த இடம் விட்டு எடுத்து பக்கத்து கோட்டில் வைப்பார்... இல்லையென்றால் அதே வரியில் கடைசிவரை ஓடிக்கொண்டே இருக்கும்....

அதே போல் எந்த இடத்தில் ஸ்டக் ஆகும் என்பது மைக்செட்காரருக்கு அத்துபடி.. அந்த வரி வரும் போது ரெடியாக இருப்பார்.... அது அவமானமான விஷயமாக எங்கள் ஊரில் பார்க்கபட்டது...

ஒரு சாக்கு பையில் பாட்டு ரிக்கார்டுகள் வைத்து இருப்பார்கள்.. அதை மாற்றுவதை பார்க்க இருக்கும் பிள்ளைகள் எதிரில் பயங்கர ஷோ காட்டியபடி அடுத்த பாடல் ரிக்கார்ட் மாற்றியதை இப்போது நினைக்கும் போது செம காமெடியாக இருக்கின்றது...

சென்னை வானொலியில் இதே போல் ரெக்கார்ட் பிரச்சனை வரும் போது நிலையத்தில் எற்பட்ட சிறுதடங்கல் காரணமாக பாடலில் ஏற்பட்ட தடைக்கு வருத்தம் தெரிவிப்பார்கள்.....

இப்போது எல்லாம் அப்படி வருத்தம் தெரிவிக்க வாய்ப்பே இல்லாதது போல்
விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுவிட்டது... 7மணிக்கு மருதமலை மாமணியே முருகைய்யா...போட்டு கீற்றுக்கொட்டகையில் படம் ஆரம்பிக்க போகின்றது என்று அறிவித்த சாதனம் இன்று சுவடு இல்லாமல்.....

சிலேட்டும் பலப்பமும் - கால ஓட்டத்தில் ...

அம்மாவின் புடவை தலைப்பை பிடித்துக்கொண்டு சுற்றியவனை, திடும் என்று வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள அவனை சிறைபிடிக்கும் சிறைசாலைகளுக்கு, கல்வி கூடம் என்ற நாகரிக பெயரும் உண்டு...

என் அம்மா தன் ஒரே மகனைபெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்ற கனவோடு என்னை பள்ளியில் சேர்க்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். அந்தநாளும் வந்தது...நான் கொண்டையம் பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்தான் என் பள்ளி வாழ்க்கை ஆரம்பம் அனது...

அப்பா முதல் நாள் இரவே...எனக்கு ஒரு துணிப் பையும் சிலேட்டும் அ,ஆவன்னா அட்டை புத்தகமும் , சிலேட்டு பலப்பமும் வாங்கி வந்து விட்டார்...நாளையிலிருந்து பள்ளி போக வேண்டும் என்று நினைக்கும் போது மனதில் கொஞ்சம் சந்தோஷமும் நிறைய பயமுடன் கூடிய மனநிலையில் நான் இருந்தேன்...


ஒரு  நாள்... என்  அப்பாவோடு பள்ளிக்கு போனேன்...அன்று என் கைபிடித்து சதாசிவம் (H.M) என்பவர், என் வலது கையை தலைக்கு மேல் அரைவட்டம் அடித்து காது பிடிக்க சொன்னார்கள்... செய்தேன் இத்தனைக்கும் எனக்கு 5 வயதுதான் 6 வயது என்று பொய் சொல்லி என்னை பள்ளியில் சேர்த்தார்கள்.....

என் அம்மாவும் அப்பாவும் என்னை விட்டு போகும் போது எனக்கு கண்ணில் நீர் முட்டிக்கொண்டது...ஆரஞ்சு பழ சுளை போன்ற மிட்டாய்கள் அப்போது ரொம்ப பேமஸ் ,அதனை என் வகுப்பு தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கொடுத்து விட்டு பள்ளியில் உட்கார்ந்தேன்..

டீச்சர் கமலாம்பாள் என்பவர் எனக்கு வகுப்பு ஆசிரியை.... “அ” என்பதை மட்டும் முதல் நாள் பாடமாக, போர்டில் எழுதி போட்டு அதனை அனைவரும் எழுதினோம் ..டீச்சர் பலப்பத்துடன் வந்து எல்லோருடைய சிலேட்டிலும் ரைட் போட்டு சென்றார்....

அதன் பிறகு 3ஆம் வகுப்பு வரை சிலேட்டும் பலப்பமாகவே பள்ளி வாழ்க்கை ஓடியது...

ஒரு பாடம் எழுதி அதன் பிறகு கணக்கு பாடம் எழுத சிலேட்டை அழிக்க என்ன செய்வேண்டும் என்றால் சட்டென சிலேட்டில் (எச்சிலை) காரி துப்பி அதனை சட்டென்று துடைத்து அடுத்தபாடம் எழுதுவோம்.... என் வகுப்பில் ஆனந்தன் என்பவன் படித்தான்  அவன் சிலேட்டில் பாடம் அழிக்க எச்சில் துப்பினான் என்றால் , நான்கு பேர் தள்ளி உட்கார்ந்து இருக்கும் என் மேல் தெரிக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்....

ஒரு நாளைக்கு ஆனந்தன்  சிலேட்டு துடைக்க துப்பிய எச்சிலை மட்டும் சேகரித்தால் ஒரு ஆப் லிட்டர் பெப்சி பாட்டில் அளவுக்கு சேகரிக்கலாம்....
ஒரு சில நேரத்தில் பள்ளிக்கு பல் விளக்காமல் வந்து விடுவான்...ஊத்தை நாற்றத்தோடு சேர்ந்த எச்சிலை...அதோடு கூடிய ஒரு வித நாற்த்தை வகுப்பு முழுவதும் ஆக்ஸ் ஸ்பிரேயர் போல் வகுப்பு முழுதும் மனம் கமழ செய்வான்...

அதே போல் சிலேட்டில் பால் அச்சு கொட்ட கோவை கொடி இலைகளை பயன்படுத்துவோம்... அப்படி பயன் படுத்தும் போது சிலேட்டில் இலையை நசுக்கும் போது ஒரு வாசம் வரும்.. அந்த வாசத்தை இப்போது உள்ள பிள்ளைகள் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை....

இரண்டாவது வந்ததும் கொஞ்சம் நாகரிகம் கற்று கற்பூர டப்பாக்களில் கோவை இலைகளை பறித்து ஸ்டாக் வைத்து சிலேட்டில் எச்சி துப்பி துடைப்பதற்க்கு பதில் பயன்படு்த்துவோம்... இதில் பிரச்சனை என்வென்றால் 4 நாளைக்கு முன் பறித்த இலை சின்ன டப்பியில் காற்று போகாமல் புழுங்கி ஒரு வித அழுகின நாற்றத்துடன் யூஸ் செய்வோம்.... அப்போதும் கூட ஆனந்தன் சிலேட்டை எச்சில் துப்பிதான் துடைப்பான்....

பலப்பம் போல் டேஸ்ட்டான ஒரு உணவு பொருள் உலகத்தில் வேறு ஏங்காவது இருக்கின்றதா என்று தெரியவில்லை... பொதுவாக மதியம் 3 மணிக்கு மேல் சற்று வெறுப்பாக இருக்கும் நேரத்தில் பலப்பம் சாப்பிடுவோம்...நல்ல டேஸ்ட்...


40 பிள்ளைகளும் தலைமை ஆசிரியர் வகுப்புக்கு வரும் போது, எழுந்த வணக்கம் சொல்ல எழுந்தால், தரையில் பயத்தில அவசரத்தில், பலப்பத்தை விபூதிக்காக தரையில் தேய்த்த சுவடுகள் எல்லோரும் எழுந்து நிற்க்கும் போது தரையை பார்த்தால் அந்த தேய்த்த சுவடுக்ள் ஒரு மார்டன் ஆர்ட் போல் இருக்கும்....

கல் சிலேட்டகள்தான் என் பேவரெட் ஆனால்,அந்த சிலேட்டுகள் கைதவறினால் கோவிந்தாதான்...அதன் பிறகு தகரத்தில் சிலேட்டுகள் வந்தன ... ஆனால் அதில் கோவை இலையை வைத்து அழி்த்த பின் தகர சிலேட்டுகளில் நன்றாக எழுத வராது....கல் சிலேட்டுகள் போல் பால் அச்சி கொட்டாது...

பலப்பத்தில் ட கருப்பு கலரில் குச்சி போல் சில பலப்பங்கள் வந்தன இருந்தாலும் பால் அச்சி கொட்டாத காரணத்தால் அவைகள் சடுதியில் மறைந்தன....சிலேட்டில் பலப்பத்தில் எழுத பழகிய கை விரல்கள் இப்போது கம்யூட்டர் கீ போர்டுகளில் தமிழ்வார்த்தை உருவாக்க நாட்டியம் ஆடுகின்றன... காலம்தான் எவ்வளவு விரைவாய் மாற்றங்களை விரைந்து அறிமுகபடுத்துகின்றது...

கால ஓட்டத்தில் .. காமிக்ஸ் பத்தகங்கள்..?


சிறு வயதில் பள்ளி செல்லும் போது எங்கள் பள்ளி அருகே உள்ள கிளை நூலகத்தில், தினமும் கையெழுத்து போட்டு விட்டு படிக்க செல்லுவோம். படிப்பதை விட அந்த வயதில் கையெழுத்து போடுவதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்... குப்புசாமி என்று பெயர் இருக்கின்றது என்று உதாரணத்ததுக்கு வைத்துக்கொள்வோம்..முதல் ஒரு வாரத்துக்கு குப்புசாமி பெயர் புரியும் படி எழுத்து இருக்கும் அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் வெறும் கிறுக்கலாய் இருக்கும்.... அதன் பிறகு முதல் எழுத்து மட்டும்தான் இருக்கும் அதன் பிறகு இதயதுடிப்பு கிராப்போல் வளைந்து நெளிந்து இருக்கும்....

அப்படி அடித்து பிடித்த கையெழுத்து போட்டு விட்டு முதன் முதலாக வாசிக்கும் வாசிக்கும் பேப்பர் தினத்தந்திதான்... அந்த பேப்பர் எடுத்த இரண்டாவது பக்கத்தில் படக்கதை கன்னித்தீவு இருக்கும். லைலா என்னவானாள், அவள் கடத்திய அரக்கனிடம் இந்து தப்பித்தாலா? சிந்துபாத் அவளை எப்படி காப்பாற்ற போகின்றான் என்ற கவலை எல்லாம் அப்போது எழும் அது பற்றி பேசிக்கொள்வோம்.......

அந்த சின்ன இடத்தில் மூன்றாக துடுத்து படம் போட்டு இருப்பார்கள் சில நாட்கள் சிந்துபாத் போடும் கத்தி சண்டையை வைத்து இரண்டு நாட்களுக்கு ஒப்பேற்றுவார்கள், சில நாட்களில் அவர் மட்டும் பிரேமில் இருப்பார்... அவர் யோசிப்பதாக இருக்கும் லைலாவை உடன் காப்பாற்றவேண்டும்... அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரியவில்லை? இதுதான் சில நாட்களில் இருக்கும் இருப்பினும் அதனை தொடர்ந்து வெக்கம் இல்லாமல் படித்துக்கொண்டு இருப்போம்....


அதன் பிறகு மெல்ல ராணிகாமிக்ஸ் வந்தது...ராணிகாமிக்சில் செவ்விந்தியர்கள், ஷெரிப், போன்ற கௌபாய் கதைகள் தொடர்ந்து வந்தன... அதிலும் அந்த கொள்ளையர்களிடமும், ஷெரிப்பின் ஷு கால்களிலும் ஒரு சின்ன சக்கரம் இருக்கும் ... அது தீபாவளி பண்டிகைக்கு அம்மா சோமாஸ் செய்யும் போது மாவின் உள்ளே தீனி வைத்து விட்டு அதனை இது போன்ற சக்கர கத்தியால்தான் கட் பண்ணி எடுப்பாள்....நகரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் ஷெரிப்புக்கு அவ்வப்போது கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்பட அவர்கள் கொட்டத்தை அடக்குவதுதான் ஷெரிப்பின் வேலை..... இந்த கதைகளில் அதிகம் என்னை கவர்ந்தது துப்பாக்கி சண்டைதான்..... அதே போல் டைகர் ஹென்றி, டொன்டொயிங் என்ற வார்த்தைகள் அப்போது பிரசித்தம்.... ஜேம்ஸ் பாண்ட் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.. சரியான நேரத்தில் நினைவு படுத்திய யாசவிக்கு என் நன்றிகள்


பேட்மேன் , மந்திரவாதி மான்ட்ரேக், ஆர்ச்சி,போன்றகதைகளும் ரொம்ப பேமஸ்.... இருப்பினும் லயன் காமிக்ஸ்ல் , முத்துக்காமிக்ஸ்,மந்திரக்கை மாயாவி கதைகள்தான் என் ஆல்டைம் பேவரிட்,கொள்ளையர்களை அவர்கள் இடத்தில் மறைந்து சென்று துப்பறிவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதிலும் அவருக்கு பவர் போய் விட்டால் ஏதாவது ஒரு கரண்ட் கனெக்ஷனில் கை வைத்து மாயமாகிவிடுவார்... அப்புறம் எனக்கு ரொம் பிடித்த கதை என்றால் ஸ்பைடர்மேன் கதைககள்தாள் , சில கதைகளில் ஸ்பைடர்மேன் வில்லனாகவும் நல்லவனாகவும் வருவார்...தலைப்புகள் எல்லாம் செம கமெடியாக வைத்து இருப்பார்கள்..... விசித்திர விமாணங்கள்,திமிங்கில அரக்கன், மர்மத்தீவில் மயாவி போன்ற அசத்தல் தலைப்புகள் இடம் பெற்று இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணில் அதிகம் படுவதில்லை....

அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்கள் கண்ணில் தென் படுகின்றன... பள்ளி வருடக்கடைசி கோடை விடுமுறையில் இந்த புத்தகங்களுக்கு நல்ல மதிப்பு எங்கள் மத்தியில், புத்தகங்கள் பகிர்ந்து கொள்வோம், அதற்காகவே சண்டை அதிகம் போட்டுகொள்ளமாட்டோம்.... சண்டை போட்டுவிட்டால் யாரிடம் போய் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் வாங்குவது சொல்லுங்கள்???

இப்போதெல்லாம் சுட்டி டிவியில் எல்லாவற்றையும் பிள்ளைகள் பார்த்து விடுகின்றார்கள். இதனால் பிள்ளைகளின் கற்பனை திறன் குறைந்து இருந்தாலும் அது வேறு வழியில் இயற்க்கை சமன் செய்து விடும்.... காரணம் முன்னைவிட பிள்ளைகள் ரொம் சுட்டியாக இருக்கின்றார்கள்,. கிராமம் நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஸ்மார்ட்டாக இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் டிவி என்றால் அது மிகையில்லை...

நிறைய படக்கதை படிக்க எதாவது தப்பு செய்து விட்டு ஜெயிலுக்கு போய் ஒரு அறை முழுவதும் காமிக்ஸ் பத்தகங்கள் நிரப்பி, அம்மாவின் கடைக்கு போய் வா என்ற இம்சை இல்லாமல் எந்த டிஸ்டர்பும் இல்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைத்த காலங்ககள் எல்லாம் ஒரு காலம். நிச்சயமாக அது ஒரு கனாகாலம்தான்

கால ஓட்டத்தில் ..தண்டவாள ஓர கைகாட்டி மரங்கள்...


கால ஓட்டத்தில்காணாமல் போனவைகளில் இந்த பகுதியில் இன்று ரயில் பாதையோரத்தில் இருந்த கைகாட்டி மரங்களை பற்றி பார்ப்போம்.

ரயில் எல்லோருக்கும் பிடிக்கும் .
சின்னவயதில் அது போகும் போது ஏற்படுத்தும் தாளகதி, டடக் டக் டக் என்று சுருதி மாறமல் தொடர்ந்து செல்லும் சத்தம் எனக்கு ரொம்ப பிடித்தமானது...

பள்ளி விட்டு வரும் போது ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து, அது நொறுங்கும் அழகை பார்த்து ரசிப்போம்...
அதில் ஒரு கண்டு பிடிப்பாளன்..

இப்படி தண்டவாளத்துல கல்ல வச்சி ஒடச்சிதான் கோலமாவு செய்யறாங்க என்று சொல்ல எல்லோரும் அவன் வாயையை பார்த்தோம், காரணம் அவன் லாஜிக்காக சொன்னதுதான்..

நான் மட்டும் ஒரு படி கோலமாவுக்கு எத்தனை கல் வைப்பாங்க? இப்படி தணட்வாளத்துல வச்சி தூள் தூள் ஆன எப்படி பெருக்கி எடுப்பாங்க?என்ற கேள்வி என் மனதில் நெடுநாள் இருந்தது. இப்போது அந்த சயின்டிஸ்ட் ஊரில் மேஸ்த்திரி வேலை செய்கின்றான்...

தண்டவாள ஓரத்தில் இருக்கும் அய்யனார் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் போது ரயில் வந்தால் போட்டது போட்டபடி ஓடிப்போய் ரயிலுக்கு டாட்டா காட்டி இருக்கின்றோம்.

இப்படி ஒரு நாள் தண்டவாளத்துல கல் வச்சி சதி செயல் செய்த போது தூரத்தில் இருந்து பார்த்து விட்டஅந்த ரயில் என்ஜீன் டிரைவர் எங்கள் மேல், கனகனன்னு எரியும் நிலக்கரியை வாரி போட எல்லாரும் துண்டைக்கானோம் துணியைக்கானோம் என்று அந்த இடம் வி்ட்டு ஓட்டம் பிடித்தோம்

அப்படி ஒரு பிரமாண்ட ரயிலை நிறுத்தி சில மணித்துளிகள் காக்க வைக்கும் அந்த கைகாட்டி மரங்கள் மேல் எப்போதும் ஒரு மதிப்பு எனக்கு உண்டு...
பாரேன், அது தூக்கனா ரயில் போகுது அது இறக்கனா ரயில் நிக்கிது..என்று நண்பர்களுக்குள் சிலாகித்து பேசுவோம்...

அதே போல் பள்ளி விட்டு வரும் போது கைக்காட்டி மரத்தை நோக்கி போகும் இரண்டு கம்பிகளுக்கு நடுவில் ஒரு சின்ன குச்சியை வி்ட்டு சரசரவென கைகாட்டி தூக்கி இருக்கும் போதே அந்த கம்பியை முறுக்கி விடுவோம் ரயில் போன பின்பு வெகுநேரம் அந்த கைகாட்டி தூக்கியபடி இருக்கும், நாங்கள் அந்த குச்சியை எடுத்து கம்பி முறுக்கலை விட்டால்தான் தூக்கிய கைகாட்டி இறங்கும்.


அப்புறம் எங்களுக்கு புத்தி வந்தது. இதையே மத்த பசங்க பாத்தா இதையெ திரும்பவும் செய்து ரயில் விபத்து ஏற்படக்கூடாதுன்னு அந்த விளையாட்டை அப்பையே ஓரங்கட்டிட்டோம்.

இராவுல கைகாட்டி மரம் தெரியனும்னு அதில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு விளக்கை வைப்பாங்க... அந்த ஆள் ஏறி வௌக்கவச்சிட்டு ஏறி இறங்கறதை கண் கொட்டாம பார்ப்போம். எங்களை பொறுத்தவரைக்கும் அப்போதைக்கு ரொம்ப பெரிய டவர் அதுதான்.

பள்ளிவிட்டு வரும் போது, எங்கையோ மூச்சி இறைக்க ஓடிவரும் ரயிலுக்கு ஸ்டேசன் “பிரி”ன்னு இப்பவே கையை தூக்கிட்டு நிக்கும்.
நாங்களும் ரயில் பாக்கறதுக்காக பத்து நிமிஷம் வெயிட் செய்து ரயில் பார்த்து விட்டு வீடு செல்வோம்....

அதுக்கப்புறம் கால ஓட்த்தில் எல்லாம் மின்மயம் ஆகி கைகாட்டி மரங்கள் காணாம போச்சு. அதுக்கப்புறம் போன மாசம் ஊட்டி போனப்ப இந்த கைகாட்டி மரங்களை பார்த்தேன்...

எவ்வளவுதான் புதுமை பரட்டி போட்டாலும் wantedஆ சில விஷயங்களை பொத்தி, பொத்தி, பாதுகாக்கறது நல்ல விஷயம்தான்...


என் மனைவி கேட்டால் என்ன ஒரு மாதிரியா இருக்கிங்க?? ஊட்டி ரயில் நீங்க எதிர்பார்த்தது போல் இல்லைதானே? என்ற என்னை படித்தவள் போல் கேட்டாள்....

நான் எப்படி சொல்ல முடியும்,
அங்கு பார்த்த கைகாட்டி மரங்கள் என் பால்யகாலத்தை ரொம்ப நினைக்க வச்சிடுச்சி... என்று???

அப்படியே சொன்னாலும்.... என் மனைவியின் பதில் இதுதான்...

பொண்டாட்டிய தவிர மத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்ற சொல்லி கிள்ளிவிடுவாள்.

1431 பயுரியா பல்பொடி - கால ஓட்டத்தில் ...



எங்கள் வீட்டில் காலையில் எழுந்ததும் பல் விளக்க நாங்கள் அந்த நாட்களில் பயண் படுத்திய பேஸ்ட்,செங்கேனி அக்கா வீட்டு பசுமாடு போட்ட சாணியில் தயாரான வரட்டியை அடுப்பில் எரித்து கிடைக்கும் சாம்பல்தான், எங்கள் வீட்டின் அந்நாளைய பேஸ்ட்...

என்னதான் சொல்லுங்கள் சாம்பலில் பல் துலக்கும் சுகமே சுகம்தான்.... என்ன சாம்பலில் பல் துலக்கும் போது புதியவர் என்றால் அந்த சாம்பல் சாறு கைகளில் விழிந்து முழங்கை வரை நீளும்..

அப்போதெல்லாம் அம்மா சின்ன வயதில் பல் விளக்கி விடுவாள் அப்புறம் அதை நானே கற்றுக்கொண்டேன். இப்போது போல் எல்லாம் அப்போது ஊருக்கு கிளம்பும் போது 5 மட்டும் அடுக்காக எடுத்துக்கொண்டு போக மாட்டார்கள் .
உள்ளாடை மற்றும் மாற்று உடைகள் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...



ஒரு வெளியூர் கல்யாணத்துக்கு போகின்றீர்கள் என்றால் பிரஷ் பேஸ்ட் எல்லாம் அப்போது எடுத்துப்போக மாட்டோம். சேம்பிள் சோப்பு மட்டும் கடையில் வாங்கி கொள்வோம். காலையில் எழுந்ததும் வேப்பங்குச்சி,சாம்பல் இது இரண்டும் இல்லை என்றால் இருக்கவே இருக்கு செங்கல்...

வீடு கட்டும் செங்கல்லா? என்று வாய் பிளக்க வேண்டாம் அது போல் உடனடி பேஸ்ட் உலகத்தில் இல்லை என்பேன். வேப்பமரம், சாம்பல் கூட இல்லாத இடங்கள் இருக்கும் செங்கல் இல்லாத இடங்கள் மிகக்குறைவு.

செங்கலை எடுத்து ஓங்கி ஒரு கல்லின் மேல் அடித்தால் பல சி்ல்லுகளாக சிதறும் நாம் என்ன செய்ய வேண்டும் சிதறியதை விட்டு விட்டு அடித்த இடத்தில் பார்த்தால் மாவு போல் செங்கல் தூள் இருக்கும் அதுவே போதுமானது.. நாம் நம் எச்சிலை தொட்டு அந்த செங்கல் தூள் மேல் வைத்து பல்துலக்கி கொள்ள வேண்டும்... அவ்வளவுதான்.

இப்போது போல் அப்போதெல்லாம் டிவி விளம்பரங்கள் ஏதும் கிடையாது அப்படியே போட்டாலும் 5 பிள்ளைகளுக்கு அம்மாவான என் அம்மா மனதை எந்த விளம்பரங்களும் ஒன்றும் செய்ய முடியாது...

எந்த வெளியூர் பேனாலும் எங்க அம்மா வாங்கும் முதல் பல் பொடி 1431 பயுரியா பல் பொடிதான்

அந்த 1431பல்பொடியை அந்த வயதில் பார்த்தாலே எனக்கு எரிச்சலாக வரும் அதை வாயில் வைத்தால் எரியும், அதை கோல்கெட் போல் சுவைத்து விழுங்க முடியாது..நான் கோல் கேட் பேஸ்டின் ரசிகன்

( அப்படி விழுங்குவதை என் அம்மா பார்த்து தொலைத்து ராட்சசியாகி
அப்படி செய்வியா?, அப்படி செய்வியா? என்று வாயில் போட்டு உதடு கிழிந்து என் வாய் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு , நான் தேம்பி தேம்பி அழுது, மகது கேட்காமல், என் அம்மா என்னை சமாதானப்படுத்த முயல, நான் மண்ணில் விழுந்து அங்க பிரதட்சனம் செய்தது எல்லாம் இந்த 1431 பயுரியா பல்பொடி கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் அடுத்த பத்திக்குபோகிறேன்.)

(குறிப்பு மண்ணில் அங்கபிரதட்சனம் செய்ததற்க்காக என் அம்மா தனி பூஜை நடத்தியது தனிக்கதை..)

1431 பார்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும்... எப்படா தண்ணி ஊத்தி வாய் கொப்பளிக்கலாம் என்று இருக்கும்...

அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்களில் இந்த 1431 பயுரியா பல்பொடி விளம்பரத்தை பார்த்து இருக்கலாம்.

ரேடியோவில் வேறு

1431 புயுரியா பல் பொடி இந்தியா இலங்கை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏராளமாக விற்பனையாகும் பல்பொடி 1431 பயுரியா பல்பொடி என்று கொளுத்தி போட்டுக்கொண்டே வேறு இருப்பார்கள்...

என் அம்மா1431 பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் மற்றும் சின்ன பெண்சில் போட்டு கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்புவாள் எல்லா பசங்களும் பியாஸ்டிக் டப்பா எடுத்து வரும் போது நான் மட்டும் பயுரியா பல் பொடி தகர டப்பாவில் பலப்பம் பெண்சில் எடுதது செல்வேன்...

இந்த பல்பொடியில் பல் விளக்கினாள் பல் மற்றும் ஈருகள் உறுதியாக இருக்கும் என்று பொய் சொல்லி பல் தேய்க்க வைப்பாள் என் அம்மா. அதன் பிறகு மெல்ல மெல்ல 1431 மேல் உள்ள பயம் போய் அந்த சுவையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்

அதன் பிறகு டிவி மீடியா தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைய அடைய மெல்ல மெல்ல 1431 கதை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்பேன்.

அதன் பிறகு கோல்கேட்தனது பாடலை டிவியில் விளம்பர படு்த்தியது,

வாழ்க்கை வாழ்வதற்க்கே வெற்றி நிச்சயம் எனக்கே, பெற்றேனே சுவாச புத்துணர்ச்சி நீத்தம் பூரிக்குதே மனக்கிளர்ச்சி

என்று அந்த பாடல் அப்போது கொல்கேட் ஜீங்கில்ஸ் அதுதான்
அதற்க்கு தமிழகம் மெல்ல தலை சாய்தது....




ஆயிரம் சொல்லுங்கள் அந்த 1431 மணம் பல் விளக்கிய பிறகும் கைகளை விட்டு போகாது...இன்று டியுப்களில் பற்பசைகள் வந்த விட்டாலும் எழைகளின் பொருளாதார மற்றும் கவுரவ பல் பொடியாக விளங்கிய1431 பயுரியா பல்பொடி வாழ்க்கை ஓட்டத்தில் காணாமல் போய் விட்டது.

1431 பயுரியான்னா இன்னா அர்த்தம் தலிவா?என்க்கு பிரியவே இல்லை
உங்களுக்கு???????

இங்க் பேனாக்கள் - கால ஓட்டத்தில் ..




இங்க் பேனா 20 வருடக்ளுக்கு முன் வெகு சிறப்பாக கோலச்சிய விஷயம் இது. நாங்கள் படிக்கும் போது இங்க் பேனாவில்தான் எழுதினோம்.

ஒரு பேனாவின் விலை அப்போது 5 விருந்து பத்து ரூபாய்தான் அதை வாங்கும் போதே கடவுளின் கடை கண் பார்வை பட்டு விட்டால் நல்லது இல்லை என்றால் டெய்லி சனி நமது வெள்ளை சட்டை யுவனிபார்மில் விளையாடும்...

துணிதுவைத்து போடும் போதெல்லாம் எனக்கு திறமை இல்லை உருப்படாதது என்று சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள் என் அம்மா ... பொதுவாக என் அம்மா மொத்தமாக ஒரு பாட்டில் பிரில் இங்க் வாங்கி கொடுப்பாள் நான் ரொம்ப எழுதுவேன் என்று..

எப்படியும் நான் எட்டாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் வீட்டுதரையில் அமீபா கோலம் போட்டு இருப்பேன் இப்போது என் அம்மாவுக்கு என் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி துடைப்பத்தால் வெளுத்துவாங்குவாள்..

அப்போது பிளாஸ்டிக்கில் ஒரு மை பேனா ஒன்று அறிமுகம் ஆயிருந்தது பேனா விலை60 பைசா மட்டுமே... அப்போது அது பல வண்ணங்களில் வந்து இருந்தது. அதற்க்கு பிறகு பல வருங்கள் கழித்து மிக சரியாக 12 வருடங்களுக்கு முன் வந்த ரெனால்ட்ஸ் மை பேனா
( உலகம் விரும்பும் உன்னத பேனா... விளம்பர வாசகம்) வந்து அதுவரை மாணவச்செல்வங்களிடம் கோலாச்சி கொண்டு இருந்த இங்க் பேனாக்கள் தங்கள் வசீகரத்தை இழக்க தொடங்கின.

சில நேரத்தில் இங்ன் பேனாக்கள் ஏர் லாக் ஆகி திறக்க முடியாமல் இருக்கும் இங்க் போட்டால்தானே எழுதுவது அதை திறக்க படாத பாடு பட வேண்டும். அதற்க்கு என்று சில எக்ஸ்பர்ட்கள் பள்ளியில் படிப்பார்கள் .
அவர்களிடம் எடுத்து சென்றாள் தன் பலத்தை பிரயோகித்து சட்டென திறந்து விடுவார்கள், சில நேரத்தில் அவர்களால் முடியாது.

அப்போது சட்டை துணியை பேனா மேல் வைத்து பல்லால் கடித்து அதனை திறப்பார்கள் அதனால் எப்போதும் எல்லோர்பேனாவில் பல்லால் கடித்து திறந்த அடையாள முத்திரை நிச்சயம் இருக்கும்

என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.

அப்போது இங்க் பேனாவில் காஸ்ட்லியாக கலக்கிய பேனா ஹீரோ பேனா. அந்நாளில் ஹீரோ பேனாஎன்பது பணக்கார பசங்களிடம் மட்டும் இருக்கும். அப்படி வேறு யாராவது வைத்து இருக்கிறார்கள் என்றாள்அவர்கள் மாமா சவுதி அல்லது சிங்கப்பூர் இருந்து சமீபத்தில் வந்து இருக்கின்றார் என்று பொருள்.

நாராயணன் ஒரு வாத்தியார். ஆங்கில பாடம் எடுப்பார்எழுதும் போது மை பேனாவில் எழுதினால்
“ நீ என்ன மளிகை கடையில கணக்கா எழுத போறன்னு ”சொல்லி உதைத்து இங்க் பேனாவில் எழுதச்சொல்லி அடம் பிடிப்பார்...

இங்க் பேனாவில் ஒரே ஒரு பிரச்சனை அது கன்னிப்பெண் போல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை யாரிடமும் இரவல் தரக்கூடாது அப்படி தந்தால் உங்கள் ஸ்டைலுக்கு அது எழுதாது அபபடி எழுதினாலும் பேப்பரை கிழிக்கும்....


பேனா எப்போது பாக்கெட்டில் வைத்து ஓடி விட்டு அலலத நடந்து திறந்து பார்த்தால் இங்க் லீக்காகி இருக்கும் அதற்க்கு பசங்க பேனா கழுயுது என்பார்கள்...

பரிட்சை கடைசிநாளில் பேனா முழுவதும் இங்க் நிரப்பி அதில் கொஞ்சம் வாழைச்சாற்றை கலந்து பசங்களின் வெள்ளை சட்டை மேல் மார்டன் ஆர்ட் வரைவோம்...

அதனை மிகச்சிறப்பாக தமிழ் படத்தில் காட்சியாக வைத்தவர் கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம் அவர்கள்.. பரிட்சை முடிந்ததை காண்பிக்க அந்த இங்க் அடிக்கும் காட்சி வைத்து இருப்பார்....


இன்று உலக பொருளாதார மாற்றத்தால் பல பொருட்கள் மற்றும் பல விதமான பேனாக்கள் கிடைத்தாலும், புது இங்க் பேனா வாங்கி அந்த சின்ன கவரை உடனே தூக்கி போடாம பத்திரமா ஒரு வாரத்துக்கு வைத்து அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து பத்து பைசாவுக்கு இங்க் வாங்கி அதனை ஊத்தும்போதே கை விரல்கள் நீலக்கலராகி இப்போது பதறவது போல் எந்த கலலையும் இல்லாமல் கைகளால் துடைத்து பேனாவை மூடு்ம் போது பிரஷரில் வெளி வருவதை ஸ்டைலாக தலையில் தடவி துடைத்து எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் ..... அது ஒரு கனாக் காலம்...


இப்போது இங்க் பேனாக்கள் இல்லாமல் இல்லை அனால் முன்பு போல் கோலாச்சவது இல்லை என்பதே என் கருத்து...

இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்துங்கள்...

டிவி ஆண்டெனா.. கால ஓட்டத்தில் ...



1980களில் எல்லோருடைய வீட்டின் மாடியிலும் காக்கா கக்கா போவதற்க்கு ஏதுவாக இருந்தது இந்த வகை டிவி ஆன்டனாக்கள் தான். அப்போது எங்கள் கடலூரில் என் மாமா வீட்டில் டிவி ஆன்டெனா வாங்கிய போது என் அத்தை பசங்கள் தாமோதரன் முரளிதரன் இருவருமே அந்த ஆன்டெனாக்களை ரெடி செய்து கட்டி இருக்கிறார்கள்..


பெரிய ஆன்டெனா சென்னை தொலைக்காட்சி சின்ன ஆன்டெனா புதுவை தொலைக்காட்சி , புதுவை தொலைக்காட்சியில் டெல்லிஒளிபரப்பை அஞ்சல் செய்வார்கள்...
அதுவும் திராவிட கழக கைங்கர்யத்தால் அந்த டெல்லி ஒளிபரப்பில் என்ன எழவு சொல்லுகிறார்கள் என்றே தெரியாது ? ( இப்போது மட்டும் என்ன வாழுதாம்)



அப்போ எல்லாம் சித்தரகார் பார்ப்பதற்க்கும் மாநில மொழி பட வரிசையில் தமிழ் படம் பார்ப்பதற்க்கும் டெல்லி ஒளிபரப்பை பார்ப்போம் . எப்போது தமிழ் பட வரிசை வரும் என்று காத்து இருப்போம் நம் முறை வரும் போது அப்போதுதான் பிரதமர் அல்லது ஜனாதிபதி என்று யாராவது மண்டையை போட்டு வைக்கும்... இல்லையென்றால் எலெக்ஷ்ன் அறிவித்து உயிரை எடுப்பார்கள்....



வெயில் காலத்தில் சென்னை தொலைக்காட்சி ஏதோ மழையோடு சோளப்பொறியோடு்ம் தெரியும், நன்றாக தெரிந்தால் பால் அச்சுக்கொட்டுவது போல் தெரிவதாக நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். மிக சரியாக படம் தெரியமாடியில் எறி ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு தெரியுதா? தெரியுதா? என்று சொல்லி வீட்டு மானத்தை வாங்குவோம்....


அதைவிட படம் நன்றாக தெரிய நல்ல மெல்லிய சேலையை டிவி மேல் போர்த்தி விட்டு படம் பார்த்து இருக்கிறோம். நன்றாக காற்று அடிக்கும் போது ஆன்டேனாக்கள் கீழே விழுந்த வீர மரணம் அடைந்து கிடக்கும் அதை பார்த்து காற்றின் மேல் கோபப்பட்டு இருக்கிறோம்....

அப்போது என் வீட்டில் அப்பா செகண்ட் ஹான்டில் 1500க்கு கருப்பு வெள்ளை டிவி வாங்கி வந்தார் ஆன்டெனா வாங்க காசு இல்லை( அப்போது கலைஞர் ஆட்சியிலும் இல்லை இலவச வண்ண தொலைக்காட்சி கொடு்க்க )
நான் என் தொழில் நுட்ப மூளையை பயன் படு்த்தி இட்லி தட்டில் அன்டெனா ஒயர் இனைத்து படம் வரவழைத்து இருக்கிறேன்...


நல்ல வெயில் காலத்தில் இலங்கையின் ரூபவாகினி வரும் வேறு நாட்டு தொலைக்காட்சி நம் இல்லத்தில் தெரிவதும் அதில் தமிழ் செய்திகள் இடம் பெறுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்...

சென்னை தொலைக்காட்சி அதன் இரண்டாம் அலைவரிசை மெட்ரோ செனல் அப்புறம் பாண்டியில் டிரான்ஸ்பாண்டர் மூலம் டெல்லி ஒளிபரப்பு மொத்தம் மூன்று சேனல்கள்தான் அப்போது தெரியும்... அப்புறம் உபெந்திரா தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருந்த போது மண்டல ஒளிபரப்பு தொடங்கப்பட்டு சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டெல்லி நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பிச்சை போட்டார்கள்....

1992களில்அதிஷ்ட காற்று மாறன் மகன்கள் பக்கம் வீசஆரம்பித்த நேரம் இந்த வகை டிவி ஆன்டெனாக்களுக்கு சங்கு ஊத நாள் குறிக்கப்பட்டது... இப்போது ஒரே வயரில் 150 சேனல் தெரிகின்றது .ஒளியும் ஒலியும் பார்க்கும் போது தெருவில் சன நடமாட்டம் குறைந்த நிலை மாறி இப்போது அமைந்தகரை அப்துல்காதர் விருப்பத்துக்கு பாடல் டெடிக்கேட் செய்ய படுகின்றது

என்னதான் கால ஓட்டத்தில் இந்த ஆன்டெனாக்கள் கானாமல் போனாலும் படம் நன்றாக தெரிவதற்க்காக காற்றில் திரும்பிய ஆன்டெனாவை திருப்பிக்கொண்டு படம் தெரியுதா? படம் தெரியுதா ? என்று மாடியில் இருந்து தொண்டை கிழிய கத்தியதை இப்போது நினைத்து பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது ....

டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...




கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்

நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த தமிழனை களைப்பு போக்கி சினிமா கலை வளர்ந்த அல்லது வளர்ந்த இடம் கிராமத்து டூரிங் டாக்கிஸ்கள் என்றால் அது மிகையில்லை.





இன்று ஐநாக்ஸ் சத்தியம் போன்ற திரையரங்குகளில் ஒரு படம் பார்க்க நுழைவு கட்டணமாக இன்று ரூபாய் 120ல் இருந்து 150,180 வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள், ஆனால் அப்போது படம் பார்க்க டூரிங் டாக்கி்ஸ் வசூலித்த கட்டணம் 30 பைசா அப்போது தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை 4லிருந்து 5ரூபாய் அவ்வளவுதான்.

அப்போதும் படம்தான் பார்த்தோம் இப்போதும் படம்தான் பார்க்கிறோம் என்ன சற்று வசதிகளைஅதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். அது காலத்தின் கட்டாயம். இப்போது படம் பார்க்கும் போது சிம்ரன் வந்து நெஞ்சு அல்லது ...தடவி படம் பார்க்க வைக்கிறாரா? எதற்க்காக இவ்வளவு கட்டணம்? பாருங்கள் டாபிக் விட்டு கோபத்தில் வெளியே போய் விட்டேன்.

அப்போது டிவி எல்லோர் வீட்டிலும் தன் அழிச்சியாட்டத்தை அரம்பிக்காத நேரம். அதுவும் கலர் டிவி என்பது எல்லோருக்கும் பகல்கணவாய் இருந்த கால கட்டம் அது. உழைத்து களைத்த அத்தனை பேருக்கும் அரும் மருந்து இந்த டூரிங் டாக்கிஸ்கள்தான்.

சரி ஏன் டுரிங் டாக்கிஸ் தெரியுமா?சினிமா பேசாத காலகட்டத்தில் இருந்து பேசும் காலகட்டத்துக்கு வந்த போது அது பேசியதால் அதாவது டாக் செய்ததால் அதற்க்கு டாக்கிஸ் என்று பெயர் வைத்தார்கள்.

டுரிங்டாக்கிஸில் படம் பார்க்கின்றது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப சந்தோஷமான செயல் என்பேன். ஒரு நாளைக்குஇரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடுவார்கள் மாலைக்காட்சி அடுத்தது இரவு காட்சி. மாலை காட்சி இரவு எழு மணிக்கும், இரவு காட்சி பத்து மணிக்கும் ஆரம்பிப்பார்கள்.

டாக்கிஸ்ல் படம் துவங்கும் அழகே அழகு. முதலில் கூம்பு ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் இரவு 6.50க்கு போடுவார்கள். கிராமத்தில் படம் பார்க்க செல்லும் எல்லோர் வீட்டிலும் சின்ன பதட்டம் வந்து ஓட்டிக்கொள்ளும்.

“கொட்டாயில பாட்டு போட்டுட்டான் எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க”

என்றவுடன் அடித்து பிடித்து ஓடிய அந்நநாளைய நினைவுகள் என்னை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.

நாதஸ்வரம் 5 நிமிடத்தில் முடிந்து ஒரு வெஸ்டன் இசை ஒளிக்க ஆரம்பிக்கும் அது முடிந்த உடன் சர்வ நிச்சயமாக எந்த மைனர் வந்தாலும் வரா விட்டாலும் படம் ஆரம்பித்துவிடும்அதானால் நாங்கள் அனைவரும் நடையில் ஓட்டத்தை சேர்ப்போம்.

30 பைசா டிக்கெட் தரை டிக்கெட்டில் படம் பார்பது போன்றதொறு சுகம் எனக்கு தெரிந்து சத்தியம் ஐநாக்சில் கூட இல்லை என்பேன்.பறந்த மணல் பகுதி அதில் நடுவில் கட்டை அல்லது சிமென்ட் கட்டை கட்டி ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இருப்பார்கள். அந்த வயதில் நாங்கள் பெண்கள் பகுதியில்தான் உட்காருவோம் ஏன் என்றால் அம்மாதானே படத்துக்கு அழைத்து செல்வார் அதனால்தான். அதே போல் படம் தெரியவில்லை என்றால் கூடுதலாக மணல் கூட்டி அதன் மீது உட்காருவோம்.

யாரவது எதிரில் மறைத்தால் அவர் பின்புறம் மணலை கொஞ்சம் நோண்டினால் அவர் மெல்ல கீழ் இறங்குவார்.
அதே போல் பசங்களுக்குள் விளையாடும் விளையாட்டும் அதுவே. மண் கூட்டி உட்கார்வதும் அதனை பின்னால் இருந்து பறிக்கும் தமிழர்களின் அரசியல் விளையாட்டை அப்போதே நாங்கள் விளையாடுவோம்.

அதே போல் இருபாலிணத்தையும் பிரிக்கும் கட்டை சுவர் பக்கம் ஆண்கள் பக்கம் என்றாலும் பெண்கள் பக்கம் என்றாலும் உட்காரவே கூடாது அப்படி உட்கார்ந்தால் ஒரு லிட்டர் பெனாயிலில் கை கழுவ வேண்டும் கட்டை சுவர் ஓரம் எல்லாம் வெற்றிலைபாக்கு எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்


படம் முதல் இன்டர் வெல் விடும் போது அந்த கால முங்கள் ஊர் டாக்கி்ஸ்ல் அழது வடியும் 40 வாட்ஸ் பல்பு அழுது வடிந்து கடமைக்காக எரியும்.அப்போது கட்டை குரலில் தேங்காய் ரொட்டி முருக்கேய்,
தேங்காய் ரொட்டி முருக்கேய் என்று காலனி பசங்க அலுமினிய தட்டில் வைத்து தேங்காய் ரொட்டி முருக்கு போன்றவற்றை விற்ப்பார்கள்.
அதற்க்கு தட்டு முருக்கு என்று செல்ல பெயர் கூட உண்டு.


எங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்க்னவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தீன்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடும்.

காளிமார்க் சோடா பாட்டிலில் அந்த காலத்து லோக்கல் பெப்சி கலர் கலர்கலராக இருக்கும் அது பிரிட்ஜ் இல்லாத காலம் அல்லது அந்த ஊர் டாக்கிஸ்க்கு கட்டுபடி ஆகாததால் தேர்மக்கோல் ஐஸ்கட்டிகள் வாங்கி ஐஸ் சீக்கிரம் உருகாமல் இருக்க உமி போட்டு வைத்து இருப்பபார்கள். ஒரு கலர் 1,50 ரூபாய் அதை வாங்கி கட்டையில் சாய்ந்தபடி ஸ்டைலாக வாங்கி குடித்த காலமும் உண்டு.

முக்கோன பன்னில் ஜாம் தடவி அதில் கலர் கலரான சேமியா போல் வெள்ளை ஜாம் மேல் ஒட்ட வைத்து இருப்பார்கள். அது என்னுடைய பேவரிட் திண்பண்டம்





இப்போது போல் அப்போது எல்லாம் புது படங்கள் டென்டு கொட்டாய்க்கு வரவே வராது. அல்லது வினியோகஸ்த்தர்கள் கொடுக்கவும் மாட்டார்கள்,அன்பே வா, துணிவே துனை,சவாலேசமாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாயாபாஜார்,வசந்த மாளிகை போன்ற பழைய படங்கள்தான் திரையிடப்படும்.

சிவாஜி படத்துக்கு நிறைய பெண்கள் கூட்டத்தை பார்க்கலாம். எம்ஜியார் படத்துக்கு நிறைய ஆண்கள் கூட்டத்தையும் கொஞ்சமாக பெண்கள் கூட்டமும் இருக்கும். முக்கியமாக பாட்டாளி மக்கள் கூட்டம் மிக ஆதிகமாக வருவார்கள், நிறைய விசிலும் கூடவே சாராய நெடியும் பின்னி பெடெலெடுக்கும்.

ரஜினி கமல் படத்துக்க எல்லா சின்ன பசங்களும் வந்து கொட்டாய் சுற்றி ஓடிபிடித்து விளையாடுவதுமாக சண்டை போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள் கமல் படங்கள் வந்ததால் அரும்பு மீசை வாலிபர் பட்டாளம் கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு வந்து நி்ற்க்கும். வெள்ளிக்கிழமையானால் படம் கண்டிப்பாக மாறிவிடும் எல்லோரும் பார்த்த படம் என்பதால் அந்த படத்துக்கு ஆயில் காலம் ஒரு வாரம்தான்.

பெண்கள் பக்கம் நான் உட்கார்ந்து படம் பார்க்கும் போது ஒரு நெலியவைக்கும் பிரச்சனை என்ன வென்றால் நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள். அதனாலே நான் அடம் பிடித்து ஆண்கள் பக்கம் போய் உட்காருவேன்.


அதே போல் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சட்டென தகர சேரை மடக்கி ஒளிவரும் ஓட்டையை அடைத்தும் ரகளை செய்வார்கள். முதல்நாள் படம் ஓட்டுவதில் பிரச்சனை என்றால் ஒரு பாஸ் கொடுத்து அனுப்புவார்கள் அதை எடுத்து போய் டிக்கெட் இல்லாமல் படம் பார்க்கலாம். அந்த பாசுக்கு வேறு அடித்து கொள்வார்கள்...


கால மாற்றத்தில் காணாமல் போனாலும் இன்றளவும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது டுரிங் டாக்கிஸ்கள்தான். எப்போது அந்த டெண்ட் கொட்டைகளை பார்த்தாலும் பழைய நினைவுகள் என்னில் நிழலாடும் எங்கள் ஊர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஜெகதாம்பிகா என்ற டெண்ட் கொட்டகை இருந்தது, அந்த நினைவுகள்இதை எழுதும் போது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்

என்ற ஆண்பாவம் படத்து பாடல் எங்கேயோ கேட்பது போல் இல்லை, அந்த பாடலில் வரும் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை.....

கால ஓட்டத்தில் (கோலங்கள்)






போன பதிவில் ஹரிக்கேன் விளக்கு பற்றி எழுதி இருந்தேன். நான் நினைத்துகூட பார்க்காத அளவில் அந்த மறு பதிவுக்கு பதிவர்கள் படித்து பின்னுட்டம் இட்டும் தமிலிஷ்ல் ஓட்டு போட்டும் என்னை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள்.அதை விட முக்கியம் இரண்டு முன்று பேர் தெளிந்த நிரோடை போன்றஎழுத்து என்று வேறு பாராட்டிவிட்டார்கள். இன்னும் தெளிந்ததாய் எழுத முயற்ச்சிக்கிறேன்.

இந்த இரண்டாம் பாகத்தி்ல் நாம் பார்க்க போவது கோலங்கள் கோலங்கள அழகான கோலங்கள் என்று சன்டிவியில் 5 வருடமாக ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரின் தலைப்பு பற்றியது இது.

கோலங்கள்

கோலம் பொதுவாக தமிழகத்தில் மார்கழி மாதம் மட்டும் ரொம்பவும் பர பரப்பபாக தமிழக பெண்கள் கோலம் போடுவார்கள். கார்த்திகை மாதமே மார்க்கெட்டில் கோலப்புத்தகம் , கோலக்கட்டியும் கன ஜோராக வியாபாரம் கலை கட்ட தொடங்கும்.கோலப்புத்தகம் வாங்கி கோலகட்டியால் முதலில் தரையில் சிக்கு கோலங்கள் மற்றும் ஊடு புள்ளி வரிசை கோலங்கள் போட்டு பழகுவார்கள்.

கோலப்புத்தகத்தை நம்பி சானி தெளித்து தெருவில் உட்கார்ந்தால் அலங்கோலம்தான். ஏனென்றால் நிறைய டிசைன் கோலங்கள் பிரின்ட் மிஸ்ட்டேக்கால் சரியாக வராது. அதே போல் சிக்கு கோலத்தை பொறுத்த வரை ஒரு முறை பேப்பரில் அல்லது தரையில் ஒரு முறை போட்டு பார்த்த பிறகே வாசலுக்கு வர வேண்டும். அப்போதுதான் தெருவில் மானம் கப்பல் ஏறாமல் தப்பிக்கும்.

பொதுவாக இந்த கோலம் என்பது மார்கழி குளிரில் பெண்கள் படுத்து ரெஸ்ட் எடுத்துவிடக்கூடாது என்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு கஸ்டம் இது என்பேன். இது தெரியாத தமிழக பெண்டிர் யாரோ ஒருவர் உசுப்பி் விட்டதற்க்கு இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்களை பொறுத்தவரை அழகாக இருக்கிறது என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு எந்தளவுக்கு வேண்டுமானாலும் காரியத்தை சாதித்து கொள்ளலாம். வெளியே போய் விட்டு வீட்டுக்குள் போகும் போது வீட்டு ஆண் இந்த தெருவிலேயே உன் கோலம்தான் சூப்பரா இருக்கு, பக்கத்து விட்டு இந்துமதி போட்ட கோலம் உவ்வே....

கலரா அடிச்சு இருக்கா? அவ மூஞ்சி மாதிரியே இருக்கு என்று சொல்லும் போது நம் வீட்டு பெண்களுக்கு பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி அசிங்க படுத்தபட்டதில் அவ்வளவு ஒரு சந்தோஷம் இருக்கும்.

மறுநாள் நேற்றை விட இன்று கோலத்தில் கலர் அழகாக சிறிதும் பிசிர் தட்டாமல் இருக்கும். பக்கத்து வீட்டு இந்து மூஞ்சி நல்லா இல்லை என்று சொன்னவன் நம்ப மூஞ்சி நல்லா இல்லை சொல்லறதுக்கு ஒரு நொடி போதாது.. என்ற பயமே காரணமாக இருக்கும். கோலம் அற்புதமாக இருக்கும்.

எங்கள் தெருவில் என் அம்மாவுக்கு போட்டியே இல்லை, என் அம்மா மிக அழகாக கோலம் இடுவாள். நான் மெயின் ரோட்டில் இருக்கும் என் அத்தை வீட்டுக்கதான் செல்வேன் எங்கள் வீட்டு வாசல் ரொம்பவும் சின்னதாக என் அம்மாவின் கலை ஆர்வத்தை ஒருஅளவுக்கு மேல் வளர விடாமல் எதிர் வீட்டு சுவர் தடுத்தது.

என் அத்தை வீட்டில் கோலம் போட்டு கலர் கொடுத்து அப்புறம் சின்ன அத்தை வீட்டுக்கும் போய் கலர் கொடுத்து கோலத்தை நிறைவு செய்வோம்.சில நாட்களில் விடியல் 5 மணிக்கு ஆரம்பிக்கும் கோல புராஜக்ட் சில நாட்களில் காலை ஏழுமணிவரை இழுத்து செல்லும்.

கோலத்தை பொதுவாக விடியலில் போட்டு முடித்து விடுவது நலம் இல்லையென்றால் உங்கள் கோலக்கலையை பக்கத்து வீட்டு ஆட்கள் ஊத்த பல்லுடன் வந்து கலர் கொடுப்பதில் அட்வைஸ் செய்கிறேன் என்று உட்கார்ந்து, அந்த கோலத்தை அலங்கோலமாக்கி, இலங்கை பிரச்சனை போல இடியாப்ப சிக்கலாக்கி விடுவார்கள்.

கோல ஜீரம் போதுவாக மார்கழி மாதம் தொடங்கி தை மாதம் 3 நாட்கள் வரை தொடரும். அப்போது தமிழக பேண்கள் பொங்கலை வர வேற்க்க தங்கள் விட்டு வாசலில் கோலமிடுவர் அப்போது யாரும் போகி நல்வாழ்த்து பொங்கல் நல்வாழ்த்து என்று எழுதாமல் ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டு பொங்கல் என்று எழுதுவார்கள் என்னவோ ஜார்ஜ் புஷ் கோலத்தை வந்து பார்க்கறப்ப புரியாம போயிடறாமாதிரி....

கோலத்துக்காக என் அம்மா முதல் நாள் சாயிந்திரமே தண்ணி தளும்ப தெளித்து தரையை வணக்கத்துக்கு எடுத்து வந்து மறுநாள் காலை பசு மாட்டுசானியை தண்ணீரில் கரைத்து வாசலில் தெளித்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து தென்னை துடப்பத்தால் பெருக்கி விட்டு அந்த தரையில் கோலமாவால் கோலம் போட்டால் அதன் அழகே தனிதான்.

அதே போல் போட்ட கோலத்துக்கு பார்டர் கட்டுவது என்பது ரொம்பவும் அழகான விஷயம் மட்டும் அல்ல கவர்ச்சியான விஷயமும் கூட....
எல்லார் வீட்டு கோலங்களையும் அலசி ஆராய்வோம் எந்த வீட்டு கோலம் ஆழகாக இருக்கிறது என்று... அதே போல் அட்டு பிகரா இருக்கும் அது போடற கோலத்தை யாராலயும் அடிச்சுக்க முடியாத படி ரொம்ப டாப்பா இருக்கும்

இப்போதெல்லாம் கிராமங்களில் கூட கோலம் போடும் பழக்கம் அரிதாகி வருகிறது. சென்னையில் பெண்கள் இரவு பத்து மணிக்கே வாசலில் கோலம் போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விட்டு உள்ளே அடுத்ததாக தன் கணவருக்கு சில திறமைகளை காட்ட எத்தனிக்கும் போதே டூ வீலர், கார்காரர்கள் கோலத்தின் மேல் ஏற்றி நாசப்படுத்தி விடுகிறார்கள்.

அதே போல் கோலம் போடும் போது எதிர் வீட்டு பசங்களை டாவு கட்டுவதும் நிறைய நடக்கும், போய் பால் வாங்கி வருவது போலவும், தண்ணி தூக்கி வருவது போலவும் இளவட்டங்கள் ஷோ காட்டுவார்கள். ஓ இவன் இந்தளவுக்கு குடும்ப பொறுப்பு உள்ளவனா? என்பது போல் நடந்து கொள்வார்கள்.


இப்போதெல்லாம் பெண்கள் மார்கழியில் எழுந்து கோலம் போடும் விகிதாச்சாரத்தின் அளவு குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் எழு மணியில் இருந்து எட்டு மணிக்கே துங்கப்போய்விடுவார்கள். இப்போது பத்து மணிக்கு டைட் போலிஸ் டிரஸ்சில் ராதிகா சரத் குமார் வந்து மிரட்டினாலும் தூங்க போக மாட்டேன் என்கிறார்கள்.

முன்பெல்லாம் மார்கழி மாசம் என்றால் விடியலில் குளிருக்கு இதமாக போர்வையில் சுருன்டு வெது வெதுப்பான சூட்டில் படுத்து இருக்கும் போது 4 மணிக்கு பறையடித்து செல்வார்கள், அடுத்தது மாரியம்மன் கோவிலில் எல் ஆர் ஈஸ்வரி கணீர் குரலில் செல்லாத்தா எங்க மாரியாத்தா என்று பாட அதே நேரத்தில் முருகன் கோவிலில், பார் வேந்தே என்னை பார் வேந்தே பாட்டுடன் வந்து இருக்கும் தருமியின் வணக்கம் என்ற திருவிளையாடல் ஒலிச்சி்த்திரம் ஓடத்தொடங்க, என் அம்மா மெல்ல எழுந்து புடவை சரி செய்து தலை முடியை வாரி கொண்டை இட்டு சானி தெளிக்க ஆரம்பிப்பாள்

பனி பெய்வதால் தலையில் ஒரு மங்கி குள்ளாய் போட்டுக்கொண்டு ,நேற்று இரவே தரையில் பயிற்ச்சி பெற்ற கோலம், ஹரி ஓம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து மிக பெரிதாய் மிக அழகாய் விரியும்,
கலர் கொடுக்கிறேன் பேர்வழி என்று முழங்கை வரை கலர் அப்பிக்கொண்டு உதட்டருகே ஊறல் எடுக்க அந்த கையாலேயே சொரிந்து கொள்ள அது திடிர் மீசையாக காட்சி அளிக்க நக்கலும் நையான்டியாக அந்நாளைய மார்கழி பொழுதுகள் விடியும்.

கோலம் கூட பெண் வாழ்கை போன்றதுதான் மிக அழகாக போட்டவுடன் காட்சி அளிக்கும் கோலங்கள் கொஞ்ச நேரத்தில் அல்லது போகப் போக அதன் பொலிவுகளை இழந்து விடுகின்றன.

எங்காவது பணக்கார வீட்டின் போர்ட்டிக்கோவில் போட்ட கோலங்கள் மட்டுமே அன்று சயாந்திரம் வரை அதிகாரத்தால் தாக்கு பிடிக்கின்றன

இப்போதுள்ள வயது பெண்கள் அந்த சந்தோஷத்தை இழந்து விட்டார்கள். என் மனைவி கோலம் போடும் அழகே அழகு.....

ஒரு டம்ளரில் இருக்கும் தண்ணியை
படிக்கட்டுதான்டி தெளித்து அதில் கோலக்கட்டியை எடுத்து நாலே நாளு புள்ளியை வைத்து ஒரு இழுப்பு இழுத்து குளித்து வேளைக்கு கிளம்பிவிடுகிறாள்.

என் அம்மா வேலைக்கு போகாதவள் சந்து புள்ளி சிக்கு கோலம் மாண் கோலம் மயில் கோலம் எல்லாம் போடுவாள்,ஆனால் என் மனைவி?

பயனுள்ள E-Books உங்களுக்காக..

75 வகையான கோப்புகளை கையாள ஒரே மென்பொருள்:-

      நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும்.  அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும்.  அப்படி ஒவ்வொரு மென்பொருள் நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. 

இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது.   நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால் அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் ( சோடா ஒபனர் போல!!) Free Opener.


ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது.