வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday 12 August 2011

முதுகு வலி தீர...

தலைவலி, முதுகுவலி இரண்டுமே நம்மை பாடாய்படுத்தும் நோய்களில் முக்கியமானவை. நம்மை அறியாமலேயே இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
மருந்து மாத்திரைகள் உடனடித் தீர்வு கொடுக்குமா? இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? தொடர் மருத்துவ சிகிச்சை தவிர்க்க முடியாததா? இப்படி மனதுக்குள் எழும் கேள்விகளால் நொந்து போவோம்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் பேர் தொடர் முதுகுவலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வல்லுனர்களின் அறிவுரைகள் அடங்கிய இந்த அறிக்கையில், முதுகுவலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் சிலவும் கூறப்பட்டுள்ளன. முயன்றால் முதுகுவலியை விரட்டி விடலாம்.
ஆய்வறிக்கை தரும் அறிவுறுத்தல்கள் வருமாறு: முதலில் சரியான முறையில் உட்காருவது, படுப்பது போன்ற செய்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடு, அலுவலகம், வெளியிடங்களில் நிமிர்ந்து உட்கார வேண்டியது மிக முக்கியம். தொடர்ந்து ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து சிறிய இடைவெளியில் வாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் மேஜைக்கு ஏற்றவாறு நாற்காலியின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். களைப்பாக இருக்கும் நேரத்தில் தலையை மேஜை மீது சாய்த்து ஓய்வெடுப்பது முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத்தகைய நிலையில் ஓய்வு தவிர்க்கப்பட வேண்டும்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், சுழன்று வேலை செய்வதை தவிர்த்து எழுந்து சென்று சிறு சிறு வேலைகளை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாக முன்புறம் அல்லது பின்புறமாக சாய்வது கூடாது.
கண்கள் பாதிக்காத தூரத்தில் புத்தகத்தை வைத்து படிப்பது, எழுதுவது, தட்டச்சு செய்வது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் முன்னோக்கி குனிந்து செய்வதை தவிர்த்து முதுகுத் தண்டுவடம் தன்னிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
உடல் எடை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முதுகுவலிக்கு எளிய தீர்வு. மணிக்கொருமுறை சில நிமிட நடைபயிற்சி முதுகுத் தண்டுவடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.
மேலும் முதுகுவலி ஏற்பட்ட உடன் தகுந்த மருத்துவ அறிவுரையும் சிகிச்சையும் எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக பாதிப்பில் இருந்து விடுபடலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அரிய புகைப்படங்கள் (பகுதி-1)


















20/Jeyalalitha%2BPhotos%2B%25285%2529.jpg" width="270" />

டி.வி.டி (DvD)


இன்றைய தேதியில் DVD தட்டுகள் மிகப் பரவலாக எல்லோருக்கும் இன்றி அமையாததாகிவிட்டது.நல்ல தரமான ஒலி ஒளியுடன் கூடிய பல பழைய,புதிய திரைப்படங்கள் சந்தையில் DVD-யாக சூடாக விற்பனையாகின்றன.வீட்டு திரைக்கூடங்களில் DVD தட்டுகள் முழு திரை தாக்கத்தையும் அளிக்கிறது.(அதாவது Surround,DTS,DigitalDolphy,Wide Screen என இன்னும் பல இத்தியாதிகளுடன்).இன்னொறு விஷயம் DVD என்றாலே திரை படங்கள் மட்டும் என்றல்ல,இசை மற்றும் மென்பொருள் தகவல்கள் கூட சேமித்து வைக்கலாம்.
இங்கே சில கொசுரு தகவல்கள் DVD பற்றி உங்களுக்காக.

-ஒரு சாதரண DVDயால் 7 CD அளவு தகவல் வைத்திருக்கமுடியும்.

-ஒரு சாதரண DVDயால் 133 நிமிட உச்ச தெளிவான ஒலியுடன் கூடிய ஓட்டபடம்,8 மொழிகளில் 5.1 channel Dolby digital surround sound-டோடு வைத்துக்கொள்ளலாம்.கூடவே 32 மொழிகளில் எழுத்துவிளக்கமும்(subtitle) வச்சுக்கலாம்.

-DVD வகைகள்
Single-sided/single-layer 4.38 GB 2 hours
Single-sided/double-layer 7.95 GB 4 hours
Double-sided/single-layer 8.75 GB 4.5 hours
Double-sided/double-layer 15.9 GB Over 8 hours

-ஒற்றை அடுக்கு DVD தட்டு முழு நீள திரைப்படம் ஒன்றை ஒரே நேர் கோட்டில் இட்டால் 7.5 மைல்கள் போகுமாம்.

-DVD-ல் ஓட்டப்படம் MPEG2 முறையில் உள்ளது

-DVD-யிலுள்ள சில முக்கிய கோப்பு வகைகள்
.IFO files -contain menus and other information about the video and audio.
.BUP files -are backup copies of the .IFO files.
.VOB files (for DVD-Video)
.AOB files (for DVD-Audio) are MPEG-2 program streams with additional packets containing navigation and search information

-DVD-ல் ஓட்டப்படம் 4:3 முறையிலோ (சாதாரண தொலைகாட்சிக்காக)அல்லது 16:9 (அகன்ற திரை தொலை காட்சி) முறையிலோ இருக்கும்.

-DVD-ல் UDF மற்றும் ISO-9660 file systems (கோப்புமுறை) பயன்படுத்துகிறார்கள்.

கந்தபுராணம் 3 - வேல் பெற்று விடைபெறுதல்

Get this widget | Track details | eSnips Social DNA

வீரபாகு தேவர் தூது

Get this widget | Track details | eSnips Social DNA

சூர பதுமன் பெருவாழ்வு

Get this widget | Track details | eSnips Social DNA

முருகன் திரு அவதாரம்

Get this widget | Track details | eSnips Social DNA

தெய்வயானை-வள்ளி திருமணம்

Get this widget | Track details | eSnips Social DNA

இலக்கியத்தில் நகைச்சுவை -1


Get this widget | Track details | eSnips Social DNA

இலக்கியத்தில் நகைச்சுவை - 2

Get this widget | Track details | eSnips Social DNA

சிவ உபதேசம் (கந்தபுராணம்)

Get this widget | Track details | eSnips Social DNA

அருணகிரிநாதர்...2

Track details |

Wednesday 10 August 2011

90 மென் பொருட்கள் உங்களுக்காக..! (இலவசமாய்)




தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..  Download

Software list

Web Browsers
Chrome
Google Chrome Browser 3.0.195.27
Safari
Safari 4.0.3
Opera
Opera 10.00
Firefox
Firefox 3.5.3
Messaging
Skype
Skype 4.1
Messenger
Windows Live Messenger 2009
Pidgin
Pidgin 2.6.3
Digsby
Digsby
Google Talk
Google Talk 1.0.0.104
Thunderbird
Mozilla Thunderbird 2.0.0.23
Media
iTunes
iTunes 9.0.1
Songbird
Songbird 1.2.0
Hulu
Hulu Desktop 0.9.8.1
VLC
VLC 1.0.2
KMPlayer
The KMPlayer 2.9.4
AIMP
AIMP 2.51
Audacity
Audacity 1.2.6
Spotify
Spotify 0.3.20
Imaging
Paint.NET
Paint.NET 3.36 (requires .NET 3.5)
Picasa
Google Picasa 3.5
GIMP
GIMP 2.6.7
IrfanView
IrfanView 4.25
XnView
XnView 1.96.5
Documents
Office
Microsoft Office 2007 Standard (Trial Version)
OpenOffice
OpenOffice 3.1.1 (JRE recommended)
Reader
Adobe Reader 9.2
Foxit Reader
Foxit Reader 3.1.2.1013
CutePDF
CutePDF Writer 2.8
Anti-Virus
Essentials
Microsoft Security Essentials
Avast
Avast Antivirus Home 4.8
AVG
AVG Free Anti-Virus 9.0
Runtimes
Flash
Flash Player 10 for other browsers
Flash (IE)
Flash Player 10 for Internet Explorer
Java
Java JRE 6 update 18
.NET
Microsoft .NET 3.5 Service Pack 1
Silverlight
Microsoft Silverlight 3.0
File Sharing
uTorrent
uTorrent 1.8.4
eMule
eMule 0.49c
Other
Dropbox
Dropbox 0.6.557
Evernote
Evernote 3.1.0
BumpTop
BumpTop 1.1
Google Earth
Google Earth 5.0
Utilities
ImgBurn
ImgBurn 2.5.0
CCleaner
CCleaner 2.24.1010
Launchy
Launchy 2.1.2
Revo
Revo Uninstaller 1.83
Defraggler
Defraggler 1.14.159
RealVNC
RealVNC Free Edition 4.1.3
CDBurnerXP
CDBurnerXP 4.2.6 (requires .NET)
Recuva
Recuva 1.31.437
Compression
7-Zip
7-Zip 4.65
WinRAR
WinRAR 3.90
Developer Tools
Python
Python 2.6.3
FileZilla
FileZilla 3.2.8.1
Notepad++
Notepad++ 5.5.1
JDK
Java JDK 6 update 18
WinSCP
WinSCP 4.1.9
PuTTY
PuTTY SSH client 0.60
Eclipse
Eclipse IDE for Java 3.5 SR1 (requires JDK)


அருணகிரிநாதர்...!


Get this widget | Track details | eSnips Social DNA

சமச்சீர் கல்வித்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

அரசு - உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் - வேண்டாம்
அரசு - இலவச சைக்கிள் வேண்டுமா?
மாணவன் - வேண்டாம்
அரசு - வேற என்ன வேணும்?
மாணவன் - படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

Tuesday 9 August 2011

ரியாசின் திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டி.



எமது அருமை நண்பர் அப்துல் ரியாஷ் திருப்பூர் அரிமா சங்கத்துடன் இணைந்து வழிநடத்திய  திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டியின் சில நிகழ்வுகளின் தொகுப்பு...

குளிர் அறையில் கொதிப்பு...?!

பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய திருநாமம் நினைக்கப் பட்டதோ அந்த நேரம் எல்லாம் நம்முடைய நேரமாகும். எந்த பணம் தர்மத்திற்காக செலவழிக்கப்பட்டதோ அது நம்முடைய பணமாகும். இவ்விரண்டும் எப்போதும் உதவ நமக்காக காத்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி என்பது செல்வச் செழிப்பிலோ அல்லது பெரியமாட மாளிகையிலோ கிடைப்பதில்லை. ஏர்கண்டிஷன் அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருக்கக்கூடும். ஆனால், உச்சி வெயிலில் விறகினைப் பிளப்பவனின் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சி என்பது மனநிலையைப் பொறுத்ததே தவிர பணத்தைப் பொறுத்தது அல்ல.

இளமையில் உழைப்போம்!

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாரியார்

தாயினும் சிறந்தவர் கடவுள்

* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் “கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.
* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.
* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறையும் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை.

முருகனுக்குள் பிள்ளையார்

* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது.
* நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம் உணர்கிறோம். நெருப்பு  சுடுகிறது. பிரகாசமாக இருக்கிறது. சிவந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால், நெருப்பு என்பது என்னவோ ஒரே பொருள் தான்!
* மலர் என்று எடுத்துக் கொண்டால் அதன் வண்ணம் கணபதி. வடிவம் பார்வதி. வாசனை முருகன். தாயிடம் இரண்டு குழந்தைகளும் இரு பண்புகளாக இருக்கின்றன. இதில், நமக்கு உகந்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதை இஷ்டமுடன் வழிபாடு செய்கிறோம். அதுவே இஷ்ட தெய்வம்.
* உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் எந்த உருவிலும் காணலாம். முருகனிடம் கூட நீங்கள் பிள்ளையாரைக் காணமுடியும். “”பிடித்தால் பிள்ளையார்” என்று சொல்லுகின்றனர் அல்லவா? அது இது தான்.

தியானத்தை விட சிறந்தது எது ?

வேண்டாமே பரபரப்பு!
* ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும்.
*உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது.
* உயிர்களிடம் அளவு கடந்த கருணை‌யோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது.
* கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களையும் காப்பாற்றுவதே கடவுளின் எல்லையில்லாத கருணைக்கு அடையாளமாகும்.
* ஞானத்தைத் தருபவர் நல்லாசிரியரே. வாழ்வில் நல்ல வழிகாட்டியான ஞான ஆசிரியரைப் பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டி விடலாம்.
* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.

குடும்பம் ஒரு மரம்

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று

இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில்
கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி
இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப்
பெருமக்கள் கேட்கிறார்கள்.
விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன;
இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம்.
உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம்பெருக்குகிறோம். இவை
விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே
அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து
விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்.
ஓமனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு;
ஆனால், நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் இல்லை.
எனவே, கழுவாய் இல்லாத பாவம் ஒன்று உண்டேல், அது ‘நன்றி
மறத்தல்’ என்ற பாவம் ஒன்றேயாகும். இதற்கு நேர் மறுதலையாக
அமைந்த சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும்.
ஓ இந்த உடம்பையும், உடம்பின் உறுப்புக்களையும் உள்ளுறை
கருவி காரணங்களையும் தந்தவன் இறைவன். அந்த இறைவன் ஏன்
தந்தான்? எதற்காகத் தந்தான்? எதன் பொருட்டுத் தந்தான்?
தந்ததற்கான காரணம் என்ன? அப்படித்தந்த இறைவன் எங்குள்ளான்?
அவனைக் கண்டவர் யார்? அவனைக் காண வழி யாது? என்பனவற்றை
நாளும் சிந்தனை செய்ய வேண்டும். அவ்வாறு சிந்தனை
செய்தவர்கள் தான், அடியார்களும் அருளாளர்களும்,
பக்திமான்களுமாவார். அவர்கள் வழியில் உடம்பெடுத்த நாமும்

துன்ப அனுபவம் நன்மைக்காகவே!

கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே
என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.
அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே
காட்டுகிறது. இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று
வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க
வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து
கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக
இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்
நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள
முடியாது.
காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,
கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்
நன்மைக்காகவே

கடவுளிடம் பயம் வேண்டும்

* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல. * இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே
செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான
கடவுள் வழிபாடாகும்.
* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.
நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்
செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,
கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க
வேண்டும்.
* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்
இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி
கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்
தான் இறைவனைக் காண முடியும்.

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

இன்சொல் மட்டுமே பேசுங்கள்

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்
நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை.

இளமையில் உழைப்போம்- கிருபானந்த வாரியார்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாரியார்

இறைவன் விரும்பும் நைவேத்யம்

* உயர்ந்த வழிபாட்டை “சமாராதனை’ என்று குறிப்பிடுவர். “சம்’ என்றால் “நல்ல’, “ஆராதனை’ என்றால் “வழிபாடு’ என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.
* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்.
* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை “படமாடும் கோயில்’ (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை “நடமாடும் கோயில்’ என்றும் குறிப்பிடுகிறார்.
* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.
* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை “ஆராதனை’ என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை “சமாராதனை’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.
-வாரியார்

எது நம்முடைய நேரம்?

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.
* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று குறிப்பிடுவார்.
* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.
* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.
உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.
* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.
-வாரியார்

லாபம் நமக்கு மட்டுமே!

* பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.
* “அரசு ஒழிக’ என்று கோஷம் போடும் கைதிகளை
சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.
* சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.
* சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் “ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா’ என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.
* கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.
- வாரியார்

இளமையில் வளையுங்கள்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏக்கத்துடன் காத்திருப்போம்

* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.

பேசுவதால் பயனேதும் இல்லை

* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.
* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.
* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்

அமைதி உங்கள் மனைவி

*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.
*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.
*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.
*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.
*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது