வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Wednesday 9 June 2021

ஏற்காடு சுற்றலாம் வாங்க...!

 தமிழ் டிரெக்கர் - காணொளிகள்  1

ஏற்காடு - தமிழ்நாடு

Monday 7 June 2021

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

 வங்கி வாடிக்கையாளர்கள் ..

 


   வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம்   முழு ஊரடங்கு நீட்டிப்பு - வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.   நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இரண்டு வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. “வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம். இது உங்கள் அவசர வங்கி தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டணமில்லா எண்ணை 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ அழைக்கவும்” என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது.  கனரா வங்கி வாடிக்கையாளர் சேவைக்காக 1800 425 0018, 1800 208 3333, 1800 103 0018, மற்றும் 1800 3011 3333 என்ற பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கி சேவைகளைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு வராமல் இணையவழி சேவையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.  பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் சேவைக்காக 1800 1213721 மற்றும் 1800 1037188 என்ற வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களையும் பாங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பணத்தை பெறுவதற்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து. பாதுகாப்பான முறையில் உங்கள் பணத்தை இணையவழியில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளது  பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர் சேவைக்காக 1-800-180-2222 மற்றும் 1-800-103-2222 என்ற எண்களை வழங்கியுள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இணைய வழியில், காசோலை புத்தகம், கட்டண ஆர்டர்கள், வரைவு, வாழ்க்கை சான்றிதழ், டி.டி.எஸ் / படிவம் 16 சான்றிதழ், 15 ஜி / எச் படிவங்கள் மற்றும் கணக்கு அறிக்கை போன்ற வசதிகளை பெறலாம் என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் பெயரில் எத்தனை தொலைபேசி...?

 

 உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி...

 


கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று,  உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கிடைக்கும் OTP-யை உள்ளிட்டால், உங்கள் பெயரில் எத்தனை அலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருக்கின்றது என்று அறிவிக்கும்.  உங்களுக்கு  தெரியாத அலைபேசி எண் இருந்தால், அவற்றை குறிப்பிட்டு “This is not my number’ என்று தேர்வு செய்து “Submit’ செய்தால், உங்களுக்கு ஒரு Ticket ID Ref No. வரும். அதை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.  (கைவசம் இருக்கும் அலைபேசி எண்ணை, அந்த தளத்தில் “This is my number. Required' என்று உள்ளிட அவசியமில்லை). தங்கள் உபயோகத்தில் இல்லாத எண்ணை மட்டும் குறிப்பிடவும்)
.
உங்களுக்கு தெரியாமல், உங்கள் அடையாள அட்டையை கொண்டு யாராகிலும் அலைபேசி எண் வாங்கியிருந்தால், உடனே அவற்றை இந்த முறையில் தொலைதொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் பெயரில் உள்ள அந்த எண்ணின் உபயோகத்தை நீக்க முடியும். இந்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இந்த சேவை மிகவும் பாரட்டத்தக்கது.  காலம் தாமதிக்காமல், உங்கள் உபயோகத்தில் உள்ள அலைபேசி எண்களை சரி பார்த்து கொள்ளவும்.
.
https://tafcop.dgtelecom.gov.in