வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday 21 October 2011

ரூ 100-க்கு கூட வழியின்றி இருக்கும்போது, ரூ 4000 கோடி ரூபாய் வீட்டில் தங்குவது, அவர்களின் சாபத்தைப் பெறுவது போல ?

அன்டிலியா - முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு சொகுசு மாளிகை இது. மும்பையில் உள்ள இந்த அபாரமான பங்களாவில் 6 மாடி பார்க்கிங், 3 ஹெலிபேட்கள், சொகுசு திரையரங்குகள், தொங்கும் தோட்டங்கள், மெகா பார்ட்டி ஹால், கான்ஃபரன்ஸ் அறைகள் என ஒரு மினி நகரமே உள்ளடக்கியுள்ளது. இந்திய பணக்காரர்களில் யாருக்கும் இப்படியொரு மெகா வீடு கிடையாது.



கடந்த ஆண்டு இந்த வீட்டுக்கு கிரகப் பிரவேசம் நடத்தினர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர்.



ஆனால்- இதுவரை இந்த வீட்டுக்கு அவர்கள் இடம்பெயரவில்லை.




காரணம்.... வாஸ்துதான்!
இந்த மாளிகையின் கிழக்குப் பக்கத்தில் அதிக ஜன்னல்கள் இல்லையாம். மேற்குப் பக்கம் மட்டும்தான் ஜன்னல்கள் உள்ளனவாம். இது வாஸ்துப்படி தவறான ஒன்று என்று கூறப்படுகிறது.
இதனால்தான் இதுவரை இந்த வீட்டுக்குள் வராமல், தங்களின் பழைய 14 அடுக்கு மாடி வீட்டிலேயே குடியிருக்கிறார்களாம் அம்பானி குடும்பத்தினர். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பம் தவிர, தாயார் கோகிலா பென், தம்பி அனில் அம்பானி குடும்பம் என அனைவருமே தங்கியுள்ளனர், வெவ்வேறு தளங்களைப் பிரித்துக் கொண்டு.
இந்த வீட்டிலிருந்து கிளம்பினால் சென்டிமெண்ட்டாக ராசியாக இருக்காது என்று வேறு முகேஷுக்கு சொல்லப்பட்டிருப்பதால், அவர் தயங்கி வருகிறாராம்.
அதுமட்டுமல்லாமல், மும்பையின் பாதி மக்கள் தொகை பெரும் வறுமையில், நாளொன்றுக்கு ரூ 100-க்கு கூட வழியின்றி இருக்கும்போது, முகேஷ் அம்பானி இந்த ரூ 4000 கோடி ரூபாய் வீட்டில் தங்குவது, அவர்களின் சாபத்தைப் பெறுவது போல இருக்கும் என்று ஜோசியர்கள் கூறியுள்ளனராம்.
மேலும், டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவும், இப்படி ஒரு பிரமாண்ட வீட்டுக்கு குடிபோவதன் மூலம் எதை நிலைநாட்ட விரும்புகிறார் முகேஷ்? இதை விட, ஏழைகளுக்கு நிரந்தரமாகப் பயன்தரும் திட்டங்களை அவர் தொடங்கியிருக்கலாம் என்று வேறு கண்டித்துள்ளார்.
இதையெல்லாம் யோசித்த, முகேஷ், இந்த 27 மாடி வீட்டை இப்போது நண்பர்களுடன் சேர்ந்து விருந்துண்ண, கருத்தரங்குகள் நடத்த, படம் பார்க்க மட்டும் பயன்படுத்தி வருகிறாராம்!!

நன்றி http://www.gnanamuthu.com

Wednesday 5 October 2011

சரஸ்வதி வழிபாடு வாழ்த்துக்கள்...!!!



நாமகள் துதிபாடுவோம்


வெண்பனி போன்று மென்மைகொண்டதோர்
வெள்ளைக் கமலப் பூவினிலே - எங்கள்
உள்ளம் கவரும் கொள்ளை அழகுடன்
கல்விக்கதிபதி வீற்றிருப்பாள் -அவள்
கரங்களில் தவழும் மாணிக்கவீணையின்
சுரங்களில் நாதம் தவழ்ந்துவர-கல்வி
வரம் தரும் அன்னை நிரந்தரமாக-தன்
கருணைக் கடலை காட்டி நிற்பாள்
தெளிந்த நதி நீரில் கமலமெனப் போற்றும்
அழகுமலர் மீதில் காலையிளங் காற்றில்
கதிரவனின் சுடரொளிக் கீற்றில்
தேன் தமிழில் பாடலொன்று கேட்கும்
கலையரசி கரங்களினில்
தவளுகின்ற இசைக்கருவி
மழலை மொழி பேசும் ஒரு
குழந்தையதன் குரல்போல்
செந்தமிழின் பாடலொலி மீட்டும்
மாணிக்க வீணைதரும் இராகம்-நம்
மனதில் வரும் இனிமை மிகு மோகம்
கரம்கூப்பி வணங்குவோம் வாரீர்- சரஸ்வதியை
சிரம் தாழ்த்தி இறைஞ்சுவோம் வாரீர்
கல்வியில் நாம் புகழ் பெற்றிட வேண்டியே
நாமகள் துதி பாடுவோம் -இந்த
நானிலம் முளுவதும் வாணியைப் போற்றியே
பாமாலை நாம் பாடுவோம்
மலர் மாலை நாம் சூட்டுவோம்
மன மகிழ்வோடு பாட்டிசைப்போம். 

Friday 30 September 2011

தமிழ் நாட்டின் தலை விதி..?

 
சோற்றுக்கு அரிசி இலவசம்

மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.

வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்
உண்ட களைப்பு நீங்க
கண்டு காண தொலைக்காட்சி
இலவசம்

எஞ்சிய பொழுது வலையில் மேய
மாணவர்களுக்கு மடிக்கணினி
இலவசம்.

படிப்பு ஏறாமல் பரிதவித்து போனால்
பட்டிதொட்டியில் படுத்துறங்க
ஆடு, மாடுகள்
இலவசம்.

தாலிக்கு தங்கம் இலவசம்
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்.

இலவசம் என்று கொச்சை படுத்தாமல்
விலையில்லா அரிசி, மிக்ஸி, மடிக்கணினி
என பக்குவமா பெயர் வைத்து
போதையில் பொருளீட்டி
மேதைகள் செய்யும் ஆட்சி
வாழ்க தமிழகம்.

Thursday 29 September 2011

தொல்லை தரும் தொலைபேசி..?

டெல்லி : செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.



இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Thursday 22 September 2011

கை குத்தல் அரிசி

    இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம். அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது. ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
பாலீஷ் செய்யப்படாத அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது. அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது. இது உமி எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது. அதில் விரைவான ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை, உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற பொருள் உள்ளது. அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது.
அரிசியை பாலீஷ் செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது. அதில் செறிந்துள்ள சுபாலெரோன் இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.
இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில், ‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம். அதனுடன் எத்தனால், மெத்தனால், எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம். அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே, பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ என்றார்.

ஒரு கப் பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் நம்முடைய உடலிற்கு ஒரு நாளைக்கு தேவையான 88% மேகனிஸியம் கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் மேக்னிஸியம் நமக்கு அதிக அளவு சத்தினை கொடுக்கின்றது. இதனால் எளிதில் சாப்பாட்டில் இருந்து Energy வெளிபடுகின்றத்து. மேக்னிஸியம் + கால்சியம் சேர்த்தால் தான் நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கின்றது என ஆய்வுகளில் கூறுகின்றனர். அதனால் தான் என்னவோ நம்முடைய நாட்டில் வயதனாபிறகு எல்லொருக்கும் கண்டிப்பாக மூட்டுவலி வருகின்றது…

பிரவுன் ரைஸில் அதிக அளவு நார்சத்து(Fiber) இருப்பதால் Colon Cancerயினை கட்டுபடுத்த அதிகம் உதவுகின்றது.அத்துடன் இதில் ஸெலினியம் என்பதும் காணப்படுகின்றது. இதனால் Thyroidயினை கட்டுபட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றது மற்றும் புற்றுநோயினை போக்கவும் வழி வகுகின்றது.

பிரவுன் ரைஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த அரிசி வேகவைக்க சிறிது நேரம் எடுக்கும் (சுமாராக 30 – 40 நிமிடங்கள்). அதே போல இந்த அரிசியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் இதனை வாங்கியவுடன் சீக்கிரம் சமைத்து முடித்துவிட வேண்டும். (Expires Soon). அதனால் இதனை முட்டையில் வாங்காமல் சிறிய பாக்கெட்டில் வாங்கினால் மிகவும் நல்லது. (நான் சொல்வது 2 நபர் உள்ள குடும்பத்திற்கு..சிறிய பாக்கெட்)

பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,

oஉடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.

oஇதில் சர்க்கரை அளவு 0. அதனால் இதனை சர்க்கரை நோயளிகள்  கண்டிப்பாக   சாப்பிட வேண்டியது.

o புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.

o தைராய்டினை கட்டுபட்டுக்குள் வைக்கின்றது.

o கெட்ட கொழுப்பினை நீக்கிவிடுகின்றது.

oசிறுநீரக கல் வராமல் தடுகின்றது. (அதிக அளவு நார்சத்து இருப்பதால்)

o உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

குண்டு உடலை மெலிதாக்க..?!

சிறிய நடைமுறைகள் கூட போதும்,
உடல் எடைறை குறைக்க: இது போன்ற சிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:
சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப் போம். இவ் வாறு நொறுக் குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:
'டிவி' நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, 'டிவி' நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.
தினசரி நடக்க வேண்டும்:
தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.
மெதுவாக சாப்பிட வேண்டும்:
உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண் டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளன.

பாராட்டு எனும் மந்திரம்..?

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.


யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.
ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

Friday 16 September 2011

கால ஓட்டத்தில் ஓடி ஒளிந்தவை - 1





ஹரிக்கேன் விளக்கு...




தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.

பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.

இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...


இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.

இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...

மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.

கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....

அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.

நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.

இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.

ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்
அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....


மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.

அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.

ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.

ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.

என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,
இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.

தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....  

Tuesday 13 September 2011

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.75 நாணயம் வெளியீடு


இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் 

நினைவாக,ரூ.75 நாணயம் வெளி யிடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்

தியாகிகளை கவுரவிக்கும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களின்

சேவையைப் பாராட்டும் வகையிலும் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது

நினைவு ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை வெளியிட்டு 

வருகிறது. ஆனால், இதுபோன்ற நினைவு ரூபாய் நோட்டுகள்,நாணயங்கள்

சந்தையில் புழக்கத்திற்கு விடப்படுவதில்லை. நாணய சேகரிப்பாளர்கள்

இதற்கென சிறப்பு கட்டணம் செலுத்தி, பெற்று வருகின்றனர்.1935ஆம் ஆண்டு

தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2010ஆம் ஆண்டுடன் 75 ஆண்டு

கால சேவையை நிறைவு செய்துள்ளது. இதன் நினைவாக ரிசர்வ் வங்கி, ரூ.75

நாணயம், ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயங்களை சிறப்பாக வெளியிட்டுள்ளது.

இந்த நாணயம், சில்வர் 50 , காப்பர் 40 , நிக்கல் 5 , துத்தநாகம் 5 ஆகிய உலோகக்

கலவையால் ஆனது. இதன் எடை 35 கிராம். 5 ரூபாய் நாணயம் காப்பர் 75 ,

துத்தநாகம் 20 , நிக்கல் 5 ஆகிய உலோகக் கலவையால் ஆனது. இதன் எடை 6 

கிராம்.சேலத்தில் இந்த நாணயங்களை, சேலம் பாரா மஹால் நாணயவியல், 

தபால் தலையியல் கழக துணைத்தலைவர் சுல்தான், ரூ.3500 சிறப்புக் 

கட்டணம் செலுத்தி, சேகரித்து வைத்துள்ளார்.

Saturday 10 September 2011

குருவுக்கு கல்யாணம்.


இனிய திருமண வாழ்த்துக்கள்...




ங்களது அருமை நண்பர்

                              திருவாளர் T.குருமூர்த்திக்கும் 

                                                      செல்வி M.ஷோபனாவுக்கும்

                                                                              8.9.2011  இல்லற ணை விழா..!


அன்புடன் வாழ்த்தும்..
 S.M.T.T.I  Friends

 
ஒபாமா.. Live -ல திருமண நிகழ்வுகளை பார்க்கிறாருங்கோ.....?!
                                                                                            (பாலா மெனக்கெட்டு செஞ்ச வேல இது..)

Thursday 1 September 2011

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

No.Book TitleAuthor
  Download                 
1Amma mandapamSujatha
Free Tamil eBooks
2ArangetramSujatha
Free Tamil eBooks
3ArisiSujatha
Free Tamil eBooks
4CurfewSujatha
Free Tamil eBooks
5EldoradoSujatha
Free Tamil eBooks
6Eppadiyum vazhalamSujatha
Free Tamil eBooks
7Film utsavSujatha
Free Tamil eBooks
8IlaneerSujatha
Free Tamil eBooks
9JannalSujatha
Free Tamil eBooks
10KaalgalSujatha
Free Tamil eBooks
11KaaranamSujatha
Free Tamil eBooks
12NagaramSujatha
Free Tamil eBooks
13En Iniya EndhiraSujatha
Free Tamil eBooks
14MerinaSujatha
Free Tamil eBooks
15Sujatha SirukadhaigalSujatha
Free Tamil eBooks
16Katradhum Petradhum (Vikatan)Sujatha
Free Tamil eBooks
17Kadavul IrukkiraraSujatha
Free Tamil eBooks

Thursday 25 August 2011

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்...?

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்
    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளனஅவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

Monday 22 August 2011

உங்கள் முதல் அடி எப்போது?

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  •  பின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன?’, 'ஏன்?’, 'எங்கே?’, 'எப்போது?’, 'எப்படி?’, 'யார்?’.

  • உங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்!

  • ஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான் கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப் பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10   சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்!

  • எல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான்! அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்!

  • எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

  • 100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்!

  • ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்!

  • இந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியதுதான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்!

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  • ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்!

  • எதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

  • அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்!

  • அலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்!

  • உங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்!

  • நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்!   

  • டோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது!’

  •  அதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.
உங்கள் முதல் அடி எப்போது?

ஒரு கேள்வி ...?

பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.

உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். "நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?" மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்!

கொடுங்கள்... பெறுவீர்கள்..!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது, தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்துக்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு; விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை... நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே, எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விதியை வென்ற விடாமுயற்சி

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை
இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை
இழக்க முடியவில்லை.

அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள்
சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.

பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.

சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.

மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக்
குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.

முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.

மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.

நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.

உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.

மனதோடு போராடாதீர்கள்!


உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

முயற்சி செய்து பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நீங்கள் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காதவராய் இருக்கலாம். ஆனால் இனி அரை மணி நேரத்திற்கு அதை நினைக்காமல் இருப்பது சுலபமான விஷயமல்ல.

மனம் விசித்திரமானது. எதையும் நினைக்க வேண்டாம் என்றோ, மறந்து விடு என்றோ கட்டளையிட்டு சாதித்துக் கொள்வது சுலபமான விஷயம் அல்ல. கட்டளைகளை மதித்து அப்படியே பின்பற்றும் பழக்கம் மனதிற்குக் கிடையாது.

நிறைவேறாத காதலுக்குப் பிறகு காதலியை அல்லது காதலரை மறக்க முனையும் காதலர்களுக்கு அது தெரியும். ஒரு பலவீனமான பழக்கத்தைப் பழகிக் கொண்ட பின் விட்டொழிக்க முடிவு செய்யும் மனிதர்களுக்கு அது தெரியும். குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியோர்கள் கூட சமயங்களில் மனத்தை அடக்கப் போராடியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமனே கூட யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டரிடம் புலம்புகிறான்...

"அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம்; மேரு மலையை பெயர்த்து எறிந்து விடலாம்; சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம்; ஆனால் மனத்தை அடக்குதல் எளிதல்ல."

அப்படியானால் இந்த மனதை எப்படித் தான் வெல்வது? ஆன்மீக சித்தாந்தங்களுக்குப் போகாமல், நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய வழி ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது. முதல் அறிவுரை மனதோடு போராடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். அதனுடன் போராடப் போராட பலம் பெறுவது மனமே; தளர்ச்சியடைவது நீங்களே.

போராடுவதற்குப் பதிலாக உங்கள் மனதிற்குப் பற்றிக் கொள்ள வேறொன்று கொடுங்கள். குழந்தை கையில் இருந்து ஒரு பொம்மையை வாங்கி அது அழ ஆரம்பிக்கும் முன் இன்னொரு பொம்மையைத் தருகிறோம் அல்லவா? அதைப் போல் தான். அந்த இன்னொரு பொம்மையும் ஏதோ ஒன்றாக இருக்காமல் குழந்தை ரசிக்கும்படியான பொம்மையாக இருக்க வேண்டும். குழந்தையின் கவனம் அதில் திரும்பும். குழந்தையின் தொந்திரவு இருக்காது.

மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம். சாதாரண மனிதர்களுக்கு அது மிகக் கடினமே. ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள். தானாக அந்த வேண்டாத எண்ணம் உங்களுக்குள் வலு இழக்கும். இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.

இன்னொரு அறிவுரை மனதோடு வாக்குவாதமும் செய்யாதீர்கள். மனம் ஜெயித்து விடும். என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு குடிப்பழக்கம் போன்ற ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொள்ள எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாய் ஒரு வீதியில் ஒரு கடையில் மதுவை வாங்குவீர்களேயானால் அந்த வீதியில் அந்தக் கடை வரும் போது உங்களை உந்த மனம் ஆயிரத்தெட்டு காரணங்களை வைத்திருக்கும். நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான செயல் என்ன தெரியுமா? மனம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து அந்தக் கடையைக் கடப்பது தான். மனதின் பேச்சுக்கு கொஞ்சம் காது கொடுத்தீர்களானால், லேசாகத் தயக்கம் காட்டினீர்களானால் நீங்கள் தர்க்கிக்க முடியாத பல வாதங்களை உங்கள் முன் வைத்து மதுவை வாங்க வைத்து தான் மறு வேலை பார்க்கும். மனம் நீங்கள் கடையைக் கடந்து விட்டால் கூட திரும்பி வரச் சொல்லும். நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்திற்குச் சென்று விடும் போது தான் மனம் தன் முயற்சியைக் கைவிடும்.

எனவே மனதோடு போராடாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். எது நல்லது என்பதை மட்டும் உறுதியாக அறிந்திருங்கள். தீய எண்ணமானால் நல்ல எண்ணத்திற்கு உடனடியாக மாறுங்கள். தீய செயலுக்குத் தூண்டுதலானால் உடனடியாக அந்த சூழ்நிலையை விட்டு நகருங்கள். மனதைப் பொருட்படுத்தாமல், அதனுடன் வாதிட்டு நிற்காமல், நேரம் தாழ்த்தாமல், தயக்கமில்லாமல் அந்த நல்லதை செயல்படுத்துங்கள். மனதின் அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த முதல் வினாடியிலேயே நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். காலம் தாழ்த்தினால் தோல்வியும் நிச்சயம்.

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

  • ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.

  • முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !

  • உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !

  • முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.

  • காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

  • போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.

  • எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.

  • மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

  • தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.

  • செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.

கொடி இடை வேண்டுமா ?

இன்றைய பெண்களின் கவலைக்குரிய பிரச்னை வயிறும் இடுப்பும் ‘புசுபுசு’ என்று பெருத்துப் போவது!
வெறும் வாணலியைச் சூடு செய்து, அதில் கைப்பிடி அளவு சோம்பைப் போட்டு, புரட்டுங்க. மிக்ஸியிலிட்டு பொடிச்சுக்குங்க. அரை லிட்டர் தண்ணியிலே போட்டு, நன்றாகக் கொதிக்க வெச்சு வடிச்சு, அடிக்கடி குடிச்சாலே தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
கைப்பிடியளவு பார்லியை நாலு மணி நேரம் ஊற வெச்சு, இரண்டு தம்ளர் நீரில் வேக வெச்சு, அந்தத் தண்ணீரைக் குடிச்சுட்டு வந்தாலும், கொழுப்புத் தசைகள் கரையும்.
தொப்பை மட்டுமல்ல, உங்க உடம்பே வாகாக இளைக்கணும்னா தினமும் காலையிலும் மாலையிலும், குனிஞ்சு நிமிருங்கள் வீட்டு ஹாலில் வரிசையாக பத்து கர்ச்சீப்புகளை போட்டுவிட்டு, குனிந்து எடுத்து பயிற்சி போல செய்யுங்க. குறிப்பாக உங்களுடைய அபிமான டீ.வி நிகழ்ச்சியின் போது செய்தால், டூ இன் ஒன் பலன் கிடைக்கும்!
ஃப்ரெஷ் சாலட் உங்களுக்குக் கை கொடுக்கும். குடைமிளகாய், மாதுளம்பழம், ஆப்பிள், உலர் திராட்சை, வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக்கி ஆலீவ் ஆயில், எலுமிச்சை சாறு போட்டு ஊற வைக்கவும். மதிய உணவின்போது ஒரு பெரிய கப் நிறைய சாலட்டையும் இரண்டு சப்பாத்தியையும் மட்டும் சாப்பிடவும். கண்டிப்பாக ஆறே மாதங்களில் செல்லத் தொப்பை காணாமல் போய், முல்லைப்பூ போல இருப்பீங்க!

தேவை

: வெள்ளரி விதை - 100 கிராம்,

சந்தனப் பவுடர் - 10 கிராம்,

வெட்டி வேர் - 25 கிராம்


உபயோகிக்கும் முறை:

வெட்டி வேரை, சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் ‘மொறு மொறு’ என்று உலர்த்தவும்.

அத்துடன் வெள்ளரி விதை, சந்தனப் பவுடர் சேர்த்து, மிக்ஸியில் பொடி செய்யவும்.

ராத்திரி இரண்டு ஸ்பூன் வெட்டி வேர் பவுடரை, தண்ணீரில் குழைத்து, வயிற்றில் தடவிக் கொண்டு படுக்கவும். வயிற்றின் தொள தொள சதைகள் நாளடைவில் இறுகி, புதுப் பொலிவுடன் இருக்கும்.

Sunday 21 August 2011

பாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்…)



எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.



இரண்டு பேருமே வியாபாரிகள்… ஒருவள் ஜக்கெட் பிட்களை 20 வருடங்களுக்கு முன்பு வெயிலில்  விழுப்பரம் தெருக்களில் ஜாக்கெட்பிட்டே என்று கூவி விற்றவள்.

அப்பாவின் சித்தி கடலூர் லாரன்ஸ் ரோட்டில் 20 வருடத்துக்கு முன் இலைவியாபாரம் செய்து வந்தவள். இருவருமே வியாபாரிகள் என்பதால் அவர்கள் இடுப்பில் வைத்து இருக்கும் சுருக்கு பையில் எப்போதும் சில்லரைகள்  வியாபித்து இருக்கும்.
சில்லரைகள் எப்படியாவது ஐஸ் வைத்து  பாட்டியிடம் இருந்து வாங்கி அதில் உண்டை வாங்கி தின்பதுதான்  அப்போதைய எங்களது முக்கிய பொழுது போக்கு.

பாட்டி இரவு தூங்கும் போது அதில் இருக்கும் சில்லரைகள் எடுத்து காலையில் மஜாவாக சோன்பப்படி கேக் வாங்கி சாப்பிடுவதும், தேன் முட்டாய் வாங்கி, தேன் குறைவாய் இருப்பதற்க்கு வருத்தபட்டு அழுது புலம்புவதும் ரொம்ப பிடித்தமான ஒன்று.

அப்போது எல்லாம் பத்துபைசா இருபது பைசாவைவிட  எனக்கு நாலனா எட்டான மீதுதான் எனக்கு ஆர்வம்..அப்போது எல்லாம் ஒரு ரூபாய் என்பது எனக்கு 100 ரூபாய் கிடைத்த பேரானந்தம். இப்போதும் நகர்புற,கிராமபுற ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் ஒரு கிலோ அரிசி ஆசிர்வாதம்தான்.
பாட்டியிடம் எப்படியாவது ஆட்டைய போட்டு, ஐஸ் வைத்து சுருக்கு பையை, சுருக்கிய வயிற்று பகுதியில் இருந்து எடுத்து அதில் கீழ் பக்கம் விரல்களால் முட்டு கொடுத்து சுருக்கு பையில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு போட்ட விரல்களுடன் சில்லரைகளை தேடும் போதும், விரைவாக தேடும் போது சுருக்குபையின் உள்ளே பொங்குவது போலவும் இருக்கும்.


அது பொங்கி கொண்டு இருக்கும் போது அதில் வெற்றிலைகாம்பு, கொட்டை பாக்கு, இரண்டுரூபாய். ஒரு ரூபாய்,ஐந்துரூபாய் என  நான்காய் மடித்து வைக்கபட்ட தாள்கள், சாமி பிரசாத விபூதி குங்கும பொட்டலங்கள், சின்ன பாலிதீன் பைகளில் மடித்து வைக்கபட்ட நகைகடை அடகு சீட்டு என வந்து போகும்… அவ்வப்போது சில சில்லரைகளும் வந்து போகும்…
கிழவிகள் ரிலாக்சாக உட்கார்ந்து இருக்கும் போது காசு கேட்டால் நன்றாக புதையல்  தேடுவது போல் தேடி,சுருக்குபையில் இருந்து பத்து பைசா தூக்க முடியாமல் தூக்கி  கொடுப்பார்கள். இதுவே அவசரமாக கிளம்பும் போது காசு கேட்டால், சட்டென சுருக்கு பையை தூழாவும் போது கையில் கிடப்பதை கொடுத்து விட்டு போவார்கள்.. அதிஷ்டம் இருந்தால் நமக்கு அந்த நேரத்தில் ஒரு ரூபாய் கூட கிடைக்கும்.

சுருக்குபைகள் பல கலர்களில் இருக்கும்.  அந்த கயிறு முனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து  இருப்பார்கள்.. அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள். கால் கவுலி வெற்றிலை,இரண்டு ரூபாய்க்கு மண்பாக்கு  வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் அக்கிக்கொண்டே இருப்பது என் பாட்டியின் பொழுது போக்கு.

கிராமபுற கோவில் திருவிழாக்களில் இரண்டு சுருக்கு பை  வாங்கி வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒன்று என்று மாற்றிக்கொள்வார்கள். வாழை வியாபாரம் செய்யும் பாட்டியின் சுருக்குபை வாழைகறைகள் ஏறிக்கிடக்கும். விபரம் தெரியாத போது அது அழுக்கு பை, கப்பு நாத்தபை என்று ஏளனம் செய்து இருக்கின்றேன். உழைப்பின் அருமை இப்போது தெரியும் போது அந்த வாழைகறை ஏறிய சுருக்குபையின் வாசம்   பிடிக்க இப்போது  மனது ஏங்குகின்றது. அதே போல் ஒரு மண் பாக்கு ஸ்மல் அடித்துகொண்டே இருக்கும்.

சமீபத்தில் சைதாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பெரிய கறுப்பு நிற  இடுப்பில் அழுக்கு பாவாடையில் ஒரு நரிக்குறவ பெண் ஒருத்தி சுருக்குபை  மாட்டி இருந்ததை பார்த்தேன்.


சுருக்குபை வைத்து இருந்த பாட்டிகள் ரொம்பவும் வெள்ளந்தியாக இருந்தார்கள். எல்லாக்குழந்தைகளும் அவர்களுக்கு ஒன்றுதான். பக்கத்து வீட்டு குழந்தையாக இருந்தாலும் தாங்கள் வாங்கி வந்த தின்பண்டத்தில் பாதியை பகிர்ந்து அளிப்பார்கள். ஆனால் இப்போது உள்ள பாட்டிகள்   அப்படி இல்லை , பக்கத்து விட்டு பையனை விடுங்கள் குடும்பத்தித்தினுள்ளே மகள் குழந்தை மகளின் நாத்தனார் குழந்தை என பேதம் பார்க்கபடுகின்றது. இவைகளுக்கு சிரியலும் ஒரு காரணம்.

எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் எந்த பாட்டியும்  இப்போது சுருக்குபை வைத்துக்கொள்வது இல்லை. பைக்கு பதில் மார்டன் பாட்டிகள், ஜாக்கெட்டினுள் தொங்கிய மார்பு  இடைவெளிகளில் பர்ஸ் வைப்பது வழக்கமாகிவிட்டது.  பேருந்தில் பர்ஸ் எடுக்கும் முன் கண்டக்டருக்கு முதுகு காட்டி பர்ஸ் எடுத்து பிரித்து, சில்லரை எடுத்து கொடுக்கின்றார்கள்.  நாம்  கவனிப்பதை பார்த்து விட்டால் பாட்டிகளின் உதட்டில் சிறு புன்னகை பூக்கின்றது.  தாத்தாக்களின் காம பார்வையில் தாங்கள்  சிக்கிய அந்த காலத்து ஞாபகங்கள் போல அந்த புன்னகை தெரிவிக்கினிறது.

இப்போதும் சுருக்குபை பற்றி நினைக்கும் போது, அந்த ஆள்காட்டி சுண்ணாம்பு விரல்கள் சுருக்குபையினுள் சில்லரை தேடும் காட்சி நினைக்கும் போது அந்த உழைப்பாளி பாட்டிகளுக்கும் எப்போதும் சுடு மூஞ்சியை காட்டாத அந்த பாட்டிகளுக்கு எனது ராயல் சல்யுட்.

டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..



எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் கிராமபோனில் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும்  முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்…. அப்போது சீத்தாபதி என்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு அப்படி   சத்தமாக போட்டு எங்கள் கிராமத்து காதை கிழித்து தொங்கவிட்டனர்…..

அதன்பிறகு நான் ரசித்த பாடல் டாலிங் டார்லிங் ஐலவ்யூ என்னை விட்டு போகாதே.. என்ற பிரியா படத்தின் பாடல்கள்தான்...   எங்கள் ஊரில் எந்த வீட்டில விசேஷம் என்றாலும் அங்கு சவுண்ட் செட் போடும் இடத்தில் போய் நிற்போம்… அப்படி ஒரு ஆர்வம்….
ஒருமுறை முழு ஆண்டு பள்ளி விடுமுறைக்கு, நான் என் ஆயா வசித்த விழுப்புரத்துக்கு போனேன்… அங்கு மந்தகரையில் உள்ள அமைச்சார் கோவில் நிர்வாகி பழனிபிள்ளை என்பவர் வீட்டில் முதல் முதலாக டேப்ரிக்கார்டரை பார்க்கின்றேன்…

அவர்கள் வீட்டில் எப்போதும் தாய்வீடு படத்தில் வரும் ஜாஹோ.. ஜாஹோ உன்னை அழைத்தது கண்... உறவை நினைத்தது பெண் என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்பார்கள்..  அதே பாடலை நனும் திரும்ப திரும்ப கேட்க அந்த டேப்ரிக்கார்டர் மேல் எனக்கு மெல்ல காதல் பிறந்தது… பிற்காலத்தில் எனக்கு மென்மையான பாடல்கள் பிடிக்காமல் வெஸ்டர்ன் இசை அதிகம் பிடிக்க இதுதான் முதல்  காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றறேன்….


அதன் பிறகு என் அத்தை வீட்டில் தக்காய் கம்பெனியின் பெட் செட்  ஒன்று இருந்தது.. அதில் அன்பேவா படத்தில் வரும் ஒரு டயலாக்…. என்னது கஷாயமே தான் என்று நாகேஷ் சொல்ல சரோஜாதேவி  யாருக்கு என்று கேட்க??? நகேஷ் பாலுவுக்கு என்று சொல்லும் அந்த இரண்டு வார்த்தையை மட்டும், ஒரு ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டு இருப்போம்…

யாருக்கு பாலுவுக்கு.. யாருக்கு பாலுவுக்கு என்று விடாமல் கேட்டு கேட்டு சிரித்துக்கொண்டு இருப்போம்….ஒரு கட்டத்தில் அந்த பிளே பட்டன் மற்றும் ரிவைன்டிங் பட்டன் எல்லாம் எங்கள் மீது காரி துப்ப தொடங்கிவிட்டது… 

குணா படம் அதில் கடிதம் பாடலில்  கமல் ஒரு முக்கு முக்கு விட்டு ம்ஹும் இது மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக்காதல் அல்ல  என்று சொல்லும் அந்த இடத்தில் முக்கும் இடத்தை மட்டும் தனியாக கேட்டு பாருங்கள்…. காலையில் ஆய் வரவில்லை என்றால் முக்குவது போல் அந்த சவுண்ட் இருக்கும்… அதையும் சலிக்க சலிக்க ரிவைண்ட் செய்து கேட்டு கேட்டு சிரிபோம்... அது ஒரு அழகிய காலம்...

நான் தனியாக அது போலான ஒரு தக்காய்  பெட் செட் வாங்கி சொந்தமாக 30 ரூபாய்க்கு ஒரு ஆடியோ கேசட் வாங்கி நான் கேட்ட முதல் பாடல் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையதட்டுதான்…ஏ பக்கத்தில் தளபதி பி பக்கத்தில் சேரன்பாண்டியன்… அதில்  கண்கள் ஒன்றாக கலந்ததோ.. என்ற பாடல் அதிகம் கேட்டு இருப்பேன்…
அதன் பிறகு லோக்கல் ஆடியோ கேசட்டில் இரண்டு படங்கள் காமினேஷனில் வாங்கி கேட்பேன்…

நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில்  அவைகளை ரெக்கார்ட் செய்தேன்…

பிரம்மாபடத்தில்…. குஷ்பு பாடும்  இவளொரு  இளங்குருவி,அமரன் படத்தில் ஸ்ரீ வித்யா பாடும் பாம்பாயி பாலா என்ற குத்து பாட்டு என அது போல் மாற்றி மாற்றி பல பாடல்கள் ரெக்கார்ட்செய்து வைத்து இருந்தேன்… இதில் என்ன கொடுமை என்றால் அவ்வப்போது சிக்கி எல்லா நல்ல பாடல்களும் வீணாகிவிடும்.. கேசட்டை இரவல் வாங்கி செல்பவர்களும் அதனை ஒழுங்காக திரும்ப தரமாட்டார்கள்..


கடலூர் டூ பாண்டி செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் நிச்சயம் இளையராஜா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும்…  காரணம் நல்ல பேஸ் வைத்து பேருந்து கடக்கும் போது கும் கும் என்று சத்தம் வெளியில் கேட்கும்…

மிக முக்கியமாக…தெய்வவாக்கு படத்தில் வரும், வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் என்ற இளையராஜா பாடலை கேட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும்… பேருந்தை ஒட்டிக்கொண்டே ஒரு கையால் கேசட் முடிந்ததும் திருப்பி போட டிரைவர் முயற்ச்சி செய்யும் போது எல்லாம் அல் இல்லாமல் பயணிப்போம்… இருந்தாலும் பாடல் முக்கியம் அல்லவா???

அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்….

சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும்  ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை  நான் உபயோகபடுத்தவே இல்லை….

மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை…..

வெகு நாட்களுக்கு பிறகு என் கல்லூரியில் ஸ்டாப்புகளுக்கு மட்டும் ஒரு பங்ஷன் நடைபெற்றது.. அதில் எதாவது ஒரு திறமையை வௌபடுத்த வேண்டும் என்ற அன்பு கட்டளையை பிரின்சிபல் போட… எல்லோருக்கும் அதனை வழி மொழிவதை தவிர வேறு வழியில்லை….

நான் பாடல் பாடுகின்றேன் என்று சொல்லி விட்டேன்…. எனக்கு முன்பு பாடிய அட்மினில் இருக்கும் அக்கவுண்ட் பெண்மணி, அழகிய அசுர அழகிய அசுரா என்று ஓப்புவித்து விட்டு போனார்… நான் போனேன்..காதலனும் காதலியும் தனிமையில் இருக்கும் போது பேச நிறைய விஷயங்கள் இருக்கும் போது சமுகத்தினை பற்றி யோசிக்கும் இந்தபாடல் என்னை மிக கவர்ந்த பாடல் என்று இன்ட்ரோ சொல்லி விட்டு…. அழகன் படத்தில் வரும் ஜாதிமல்லி பூச்சரமே என்ற பாடலை பாடினேன்….

ஜென்ஸ் ஸ்டாப்களில் நான் சிறந்து பாடியதாகவும்… அந்த அழகான இன்ட்ரோவுக்காகவும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள்….எனக்கு ஆர்வத்தோடு கலர் கவரை  பிரித்து பார்த்து விட்டு, வெறுத்து போய்விட்டேன்…. அதை தூக்கி போடவும் எனக்கு விருப்பம் இல்லை… காரணம் எனது 32 வருட வாழ்க்கையில் பலர் முன்னிலையில் கைதட்டலோடு நான்  வாங்கிய முதல் பரிசு அது…..

அந்த பரிசு… சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் அதனை டேப்ரெக்கார்டரில் மட்டுமே போட முடியும்… இன்னமும் தூக்கி போட மனமில்லாமல் சீல் உடைக்கபடாமல் சிவாஜிதபாஸ் என்ற வாசகத்தோடு ரஜினி நின்று கொண்டு இருக்கும்,அந்த ஆடியோ கேசட் என் வீட்டில் இன்னும் பத்திரமாக இருக்கின்றது….