வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Saturday 8 December 2012

தமிழன் ஒரு தீர்க்க தரிசி...

சித்தர்களை கடவுளின் சீடராகவும்.. சித்தர் பாடல்களை கடவுளை தொழும் பாடலாகவும் நினைக்காமல் சிறிதளவு அறிவியல் கண்ணோடு பார்த்தால் தான் தெரியும் சித்தர்கள்தான் இந்த உலகின் இதுவரையில் யாராலும் தொடமுடியாத அளவில் அனைத்தையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள்.... மிக பழைய ஆராச்சியாலர்கள் என்று...
அதற்கு ஓர் உதாரணம்...
இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம் அதற்கு முதலில்

பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்லவேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்
(size of an hair = 50 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)

அகவே இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிபிடுவது சரசெரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளானது. சரி அதை விட சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன??

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்??

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் .

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துகொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சாரா செரியாக ஒரு அனுவலவிற்கு

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று......!!
இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே.
தொடரும் என் ஆராய்ச்சி,

நன்றி
கி. கோகுல கிருட்டிணன்.

Tuesday 4 December 2012

குங்குமப்பூ சாப்பிட்டா

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா?

இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட் குங்குமப்பூ என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது... ‘குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது‘ என்பதுதான். சரி... குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா...? இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம் அதிகளவு விழிப்புணர்வு இல்லாதது தான். தரமில்லாத குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்த பிரயோஷனமும் இல்லாமல் போகிறது என்கிறார்கள் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள சரஸ்வதி ஸ்வேதா ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ரவிசங்கர் பாபு, டி.டி.சந்திரசேகர். இதோ அவர்களே விளக்கம் தருகிறார்கள்...

குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம் பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே சேகரிக்க முடியும்.

தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.

இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.

பொதுவாக குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரிலும், ஸ்பெயின், ஈரான், கிரீஸ் நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஸ்பெயினில் விளையும் குங்குமப்பூக்கள் தான் முழு தரமானவை. அங்கிருந்து இறக்குமதி செய்து தாஜ்மகால் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் பிராண்ட் உலகத்தரம் வாய்ந்ததென ஐஎஸ்ஓ 3632 சர்டிபிகேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி மொத்த வியாபாரிகளிடம் விளக்கம் கொடுப்பதால் அவர்களும் மனம் மாறி சீப்பான குங்குமப்பூக்களுக்கு பதிலாக விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும் எங்கள் பிராண்ட் குங்குமப்பூவை வாங்கி விற்கிறார்கள். சுமார் 500 கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே சர்டிபிகேட் தருகிறார்கள். குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில் தேய்த்தால் சிவப்பாகலாம். இதையே கர்ப்பிணிகள் சாப்பிடும் போது, கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு மசாஜ் செய்வது போலாகி குழந்தை சிவப்பாக பிறக்கிறது. தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எது ஒரிஜினல்

ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.


பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.

ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு. கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.

குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால் பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.

Monday 3 December 2012

மரக்கன்றுகள் நடுவோம் வாங்க!


3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். எடுத்த மண் குழிக்குள் சரியா வண்ணம் சற்றுத் தள்ளிப் போட வேண்டும்.
அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்கட்டும். அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்க்க வேண்டும்.

மரக்கன்று நடும் நாள்:
பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது.

சரியாக நடுதல் எப்படி?
நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிக்க வேண்டும். அப்போது நாற்றுக்களைக் கவனமாக கையாள வேண்டும்.
* தண்டைப் பிடித்து தூக்காமல் பையின் அடிப்பாகத்தைப் பிடித்து தூக்குவது நன்று.
* நட வேண்டிய இடத்துக்கு நாற்றுக்களை கொண்டு வந்த பிறகு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
* வெளியில் இருக்கும் மண்ணில் சிறிதளவு குழிக்குள் தள்ள வேண்டும்.
* வேர்களை சுற்றியிருக்கும் மண்பிடிப்பு உதிர்ந்து விடாமல் பாலிதின் பைகளைக் கிழித்தோ அல்லது மண் தொட்டிகளை உடைத்தோ குழியில் வைக்க வேண்டும்.
* மீதமுள்ள மண்ணைக் குழிக்குள் போட்டுத் தள்ளி வேரைச் சுற்றி மண்ணை இறக்கவும். இதனால் நாற்று வளையாமல் நேராக நிமர்ந்து வளரும். மழைத் தண்ணீரும் அதிகம் தேங்காது.
* தண்ணீர் விடத்தோதாக கன்றைச் சுற்றி பள்ளம் இருந்தால் நன்று. சரிவான பகுதி எனில் மழை நீர் சேகரிப்பு குழிகளை பிறை வடிவில் கன்றுக்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தலாம்.
கவனம்:
* ஈர மண்ணில் செடியின் வேர்கள் அழுந்திப் பொருந்தியிருக்க வேண்டும்.
* ஈர மண்ணில் இருந்து வேர்கள் வெளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
* நாற்றை அதிக ஆழத்தில் வைத்து நட்டாலும் அது காய்ந்து கருகி விடும் என்பது ஞாபகமிருக்கட்டும். வேர்கள் வெளியே தெரியும்பிட நீட்டிக் கொண்டிருந்தால் அந்த நாற்றுக்கள் வளராது.
* வேர்கள் மடங்கி இருக்கும் வகையில் நட்டு விட்டால் நாற்று வாடி உயிரிழந்து விடும்.
* வளைந்த நாற்றுக்கள் நேராக வளராது.
* முதல் கோடை காலத்தில் நாற்றுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம்.
* நடப்பட்ட கன்றுகள் பாதுகாக்கப் பட வேண்டும். அதிக அளவில் பொது இடத்தில் மரக்கன்றுகளை வளர்க்க முற்படும்போது முடிந்தால் காவலர் ஒருவரை போட்டு கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும்
.
கடற்கரையோரம் மரம் நடும் முறை:
* செம்மண்/களிமண், வண்டல், எரு கொண்டு கலவை தயார் செய்ய வேண்டும்.
* மூடாக்கு செய்ய தென்னை நார்க் கழிவு, இலை தழைகளைச் சேகரிக்க வேண்டும்.
* 1.5 அடி X 1.5 அடி அளவு குழி எடுக்க வேண்டும்.
* அதில் பாதியில் தயாராயுள்ள கலவை மண்ணைப் போட்டு நட வேண்டும்.
* நட்ட பின் உப்பங்காற்றிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற கிழக்கு மேற்காக இருபுறமும் பனை ஓலை வைக்க வேண்டும்.
ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்து காக்க உள்ளூரிலேயே கிடைக்கும் குச்சி கோல்களைச் செடியைச் சுற்றிலும் சொறுகி வேலி உருவாக்க வேண்டும்.
கடற்கரையோரம் செடிகளைக் காப் பாற்ற இரண்டு ஆண்டுகளுக்காவது தண்ணீர் விட வேண்டும்.
நாற்று நன்றாக வளரும்போது கண்ணுக்கு எத்தனை அழகாய் காட்சி தருகிறது. இன்றைய மரக்கன்று நாளைய மரம் நாட்டின் வளம். மரங்களை குழந்தைகளைப் போல் வளர்ப் போம்