வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 4 December 2012

குங்குமப்பூ சாப்பிட்டா

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா?

இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட் குங்குமப்பூ என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது... ‘குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது‘ என்பதுதான். சரி... குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா...? இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம் அதிகளவு விழிப்புணர்வு இல்லாதது தான். தரமில்லாத குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்த பிரயோஷனமும் இல்லாமல் போகிறது என்கிறார்கள் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள சரஸ்வதி ஸ்வேதா ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ரவிசங்கர் பாபு, டி.டி.சந்திரசேகர். இதோ அவர்களே விளக்கம் தருகிறார்கள்...

குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம் பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே சேகரிக்க முடியும்.

தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.

இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.

பொதுவாக குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரிலும், ஸ்பெயின், ஈரான், கிரீஸ் நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஸ்பெயினில் விளையும் குங்குமப்பூக்கள் தான் முழு தரமானவை. அங்கிருந்து இறக்குமதி செய்து தாஜ்மகால் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் பிராண்ட் உலகத்தரம் வாய்ந்ததென ஐஎஸ்ஓ 3632 சர்டிபிகேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி மொத்த வியாபாரிகளிடம் விளக்கம் கொடுப்பதால் அவர்களும் மனம் மாறி சீப்பான குங்குமப்பூக்களுக்கு பதிலாக விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும் எங்கள் பிராண்ட் குங்குமப்பூவை வாங்கி விற்கிறார்கள். சுமார் 500 கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே சர்டிபிகேட் தருகிறார்கள். குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில் தேய்த்தால் சிவப்பாகலாம். இதையே கர்ப்பிணிகள் சாப்பிடும் போது, கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு மசாஜ் செய்வது போலாகி குழந்தை சிவப்பாக பிறக்கிறது. தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எது ஒரிஜினல்

ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.


பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.

ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு. கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.

குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால் பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.

No comments: