வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Sunday 4 March 2012

தமிழ்நாடு .. ஒரு சில குறியீடு..


புகை பழக்கத்தை விட ஒரு எளிய வழி






புகை பழக்கம் மோசமான பழக்கம் ஆனால் முயன்றால் அதிலிருந்து யாராலும் விடுபட முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு எளிய வழி உள்ளது. அதன் படி நடந்தால் புகை பழக்கத்துக்கு ஒரு பெரிய விடை கொடுக்கலாம். அப்படி என்ன வழி இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ …


இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் வேண்டும். இது தான் முதன்மையானது இது இல்லைன்னா புகை பிடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது.

புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு தோணும் அது பொய்யின்னு (மாயை) தெரிஞ்சுக்குங்க. ஆனா புற்று நோய் வர வாய்ப்பிருக்கு, இதை மனசுல போட்டுக்குங்க.



இனிமே புகை பிடிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியதும் இருக்கிற எல்லா சிகரெட்டையும் தூக்கி வீசிடனும். ஒன்னும் உங்கக்கிட்ட இருக்கக்கூடாது. தூக்கிப்போடறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும் என்ன பண்றது பழக்கத்தை விடணுமே. சிகரெட்டின் பெருமை உணர்ந்து வாய சுடுற வரைக்கும் சிகரெட்டை இழுத்தத இங்கு நினைத்து கதறக்கூடாது. நாளையில் இருந்து பிடிக்கமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கே இருக்கிற எல்லா சிகரெட்டையும் புகைக்காதிங்க. நிறைய பேர் அப்படி தான் செய்வாங்க , நாளைக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சிகரெட் புடிக்கிறத விட மாட்டாங்க, அவங்களுக்கு நாளைக்கு வரவே வராது.

புகைப்பதை நிறுத்தியாச்சுன்னு உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க, உடனே சில நலம் விரும்பிகள் 555 வாங்கி பத்து மச்சின்னு சொல்லுவாங்க, சில பேர் பத்த வைத்தே கொடுப்பாங்க, அந்த சதியில் விழுந்துடாதிங்க. நினைச்சிப்பாருங்க வெறும் கோல்ட் பிளேக்/சிசர்/பீடி ஒன்னு குடுன்னு கேட்டப்போ குடுத்தாங்களா? இல்லையே! இப்ப என்ன கரிசனம்??? ( கொடுத்தாலும் அடுத்த நாளே கடன் காரன் மாதிரி உங்களை வாங்கி தர சொல்லிடுவாங்கல்ல)

நண்பர்கள் கூட போகும் போது அவர்கள் 1 பாக்கட் வாங்கி உங்கக்கிட்ட 1 சிகரெட் எடுத்துக்க சொல்லி நீட்டுவாங்க , பழக்கத்தில் எடுத்து பத்த வச்சிறாதீங்க. வேண்டாம்! சிகரெட்டை விட்டாச்சுன்னு சொல்லிடுங்க.

இப்படி பல பல தடைகளையும் மீறி வெற்றிகரமா ஒரு வாரம் சிகரெட் புகைக்காம இருந்திங்கன்னா உங்களை பாராட்டி ஒரு டம்ளர் பழரசம் அருந்துங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

ஒரு வாரம் கழித்து சிகரெட் பத்த வைக்க ஆசை வரும். ஒன்னு மட்டும் யாருக்கும் தெரியாம அப்படின்னு சொல்லிட்டு சிகெரெட்டை கையில் எடுக்காதிங்க. அப்புறம் விட முடியாது.



சில சமயம் அடுத்தவர்கள் சிகரெட் புகைப்பதை பார்த்தா ரெண்டு இழுப்பு இழுக்க தோனும் இந்த மாதிரியான நேரங்கள் தான் மிக முக்கியமானது. இது ஒரு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு இருக்கும், இந்த நேரத்தில் மனதை வேறு திசையில் செலுத்தி புகைக்கும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டீ, காபி, பழரசம் குடிங்கள் அல்லது புகைக்கிற ஆளை திட்டுங்கள் ( மனசுக்குள் தான் ) அந்த 5 நிமிடம் போய் விட்டால் புகைக்கும் எண்ணமும் போய் விடும்.

புகை பிடிக்காம 1 மாசம் ஓட்டிட்டீங்கன்னு வைங்க உங்களை நீங்களே பாராட்டி 1 பழரசம் குடிங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

இதே மாதிரி ஒரு 3 மாசம் ஓட்டுங்க., உங்களை பாராட்டி 1 பழரசம் குடிங்க. காசு இருந்தா நண்பர்களுக்கு வாங்கி கொடுங்க. ஆனா பழரசம் குடிக்கற பழக்கத்தை விடாம தொடருங்க.

உங்களால புகைக்காம இருக்க முடியும்ன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் என்ன புகை பழக்கத்துக்கு பெரிய கும்பிடு தான். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் மறக்காம புகை பிடிக்கும் உங்க நண்பர்களை திருந்த சொல்லுங்க.



உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்..




உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!தேடல் தொடரும்..! PLS SHARE !!

எச்சரிக்கையாக இருங்கள்.


எச்சரிக்கையாக இருங்கள்.

தன்னியக்க பணம் எடுக்கும் இயந்திரத்தில் சில திருடர்கள் புத்திசாதுரியாமாக தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்! இவர்கள் இயந்திரத்தில் படத்தில் காட்டப்பட்டவாறு சில இணைப்புகளை செய்துவிட்டு அதன் சுற்றாடலில் (ஒளிப்பதிவுக்கருவியின் வீச்செல்லைக்குள்) காத்திருப்பார்கள். அங்கே யாராவது சென்று பணம் எடுப்பதற்காக வங்கி அட்டையை உள்ளே செலுத்தி இரகசிய குறியீட்ட்டை அழுத்துவார்கள். அதனை அவர்கள் ஒளிப்பதிவுக்கருவியூடாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீங்களே பணத்திற்காகவும் அட்டைக்காகவும் காத்திருப்பீர்கள். ஆனால் இவை வெளியே வர மாட்டா. நீங்கள் வங்கிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துச்சொல்வதற்காக அங்கிருந்து விலகிவிடுவீர்கள். அந்த இடைவெளியில் அவர்கள் வ்ந்து உங்கள் வங்கி அட்டையையும் தங்கள் இணைப்பையும் எடுத்துச்சென்று, உங்கள் அட்டைமூலமாக உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்! 


நன்றி -

இனிப்பு - கவனமாயிருங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே நம் கடமை. இதற்க்கு மேல் அவர்களின் சொந்த ரிஸ்க். இன்று நாம் பார்க்க போகும் ஒரு சப்ஜெக்ட் கொஞ்சம் காம்பிலிக்கேட்டடு. ஆம் இனிப்பு வகைகள் நம் வாழ்வில் அடிக்கடி சாப்பிடவில்லை என்றாலும் எப்படியாவது மாதத்தில் ஒன்று அல்ல்து பல முறை சாப்பிடும் கட்டாயத்திற்க்கு தள்ளபடுகிறோம். அது போல் ஸ்வீட் பீடா, கடையில், ஹோட்டலில் கொடுக்கும் வெத்திலை மடிப்புகள், சில சோம்பு வகைகள் பல முறை நாம் பார்த்திருக்கிறோம் வெள்ளி போர்த்தி வைத்த மாதிரி மினுமினு என்றிருக்கும். ஆரம்பத்தில் இது வட நாட்டு ஸ்வீட் வகைகள் மட்டுமே இதை தாங்கி வரும். ஆனால் இப்பொழுது அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் வரை இந்த ஸ்வீட்கள் மேல் சில்வர் ஃபாயல். அது மட்டுமல்ல ஒரு காலத்தில் மில்க், கேஸுவ், பாதாம் பர்ப்பிகள் மீது தான் இந்த ஃபாயல் இருக்கும். ஆனால் இப்பொழுது குலோப்ஜாமூன், லட்டு, மைஸூர்பாக்கு போன்ற ஸ்வீட்கள் மேல் கூட இந்த ஃபாயல் இருக்கிறது.

சரி இந்த ஃபாயல் நான் சில வாரம் முன் எழுதியிருந்த வெள்ளி, தங்க தோசைகள் மாதிரி ஒரிஜினல் ஃபாயல் இல்லை. இது எதிலிருந்து செய்யபடுகிரது தெரியுமா. இது வெஜிட்டேரியன்ஸ் மட்டுமல்ல ஹிந்துக்கள் பல பேரும் பீஃப் கறியை சாப்பிடாத காரணம் பசுவை கோமாதாவாக வணங்குவதால் தான். இந்த சில்வர் ஃபாயில் மாட்டின் குடல்களில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது. நான் வெஜ் சாப்பிடும் மனிதர்கள் கூட இந்த மாட்டின் குடலை சாப்பிடுவதில்லை. அடிமாட்டுக்கு விட்டவுடன் மாடை வெட்டி இந்த குடலை உடனே விற்றுவிடுவார்கள் காரணம் இந்த குடல் ஒரு நாளில் ரஃப்ஃபாக ஆகிவிடும் அப்புரம் அதில் உபயோகம் இல்லை. இந்த குடல்களில் இருக்கும் ரத்தம் மற்றும் சானி வெளியே எடுத்து சுத்தம் செய்த பிறகு சுத்தியலால் தட்டி ஷீட்களாக ஆக்கபட்டு பிறகு புத்தகம் போல அடிக்கி வைக்கபடுகிறது. பின்பு ஒரு சில்வர் அல்லது தங்க ஷீட்டை வைத்து ஆயிரக்கனக்கில் ஃபாயில் உருவாக்கிவிடுவார்கள். 160 ஷீட் கொண்ட ஒரு ஃபாயில் பன்ச் ரூபாய் 100 தான். அதாவது ஒரு ரூபாய்க்கும் குறைவுதான். அதுபோக ஒரு தட்டு ஸ்வீட்டுக்கு இரண்டு ஃபாயில் போதும். இந்த சில்வர் ஃபாயிலுக்கு பெயர் "வராக்" என்பதாகும். இது பிடாக்களின் மேலும் இதை உபயோகிக்கின்றனர். இதெல்லாம் இல்லை இது ஒரிஜினல் சில்வர் ஃபாயில் என வாதிட்டால் வெள்ளி விக்கிற விலைக்கு கிலோ 150 - 200 ஸ்வீட்ஸ்களில் ஃபாயில் ஒட்ட முடியுமானு கடைக்காரர்கள் கிட்ட கேளுங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்க்கலாம். வெள்ளிஃபாயிலாவது பரவாயில்லை தங்க ஃபாயில் ஸ்வீட்ஸும் அதே விலைதான். உண்மையை தெரிஞ்சுக்குங்க.வெஜிட்டேரியன் வர்க் மார்க்கெட்ல விக்கிறாங்கன்னு சொல்றாங்க அப்படி அது நான் வெஜ் இல்லைனா கண்டிப்பா அலுமினியமா இருக்கும்.

கடைசி டிப்ஸ் - பீடா கடைகளில் தடவும் ஸ்பெஸல் சுன்னாம்பு ஒரு வகை கடல் பூச்சிகள் தான் என்று ஜெயின் சமூகம் கூறுகிறது, இது கடலில் கிடைக்கும் ஒரு வகை பூச்சிகளை அந்த ஓட்டை பிரித்து வெயிலில் காயவைத்து பிறகு சுன்னாம்பில கலந்தால் ரோஸ் அல்லது காவி கலரில் வருமாம் இந்த சூனா என்ற வாசனை சுன்னாம்பு.

— with Kubendran Pothi Ramamoorthy and Althaf Tamil.

கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

   விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !




வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !



எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !




தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !

அதே போல் எந்த நடிகரின் 100 வது படமும் அவ்வளவு பிரமாதமாக ஹிட் ஆனது கிடையாது
அதறகு விதிவிலக்கு கேப்டன் பிரபாகரன்


பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது !

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !


நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !

விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !
(நான் பார்த்திருக்கிறேன்)



செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!

இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் !

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!



இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !










எனக்கு பிடித்தது:

அரசியல் என்பது தற்போதுதான் ஆனால் அதற்கு முன்பே நலத்திட்டங்கள் உதவிகள் செய்தது

வீட்டிற்கு வரபவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கும் பழக்கம்


எந்த விசயத்தையும் உண்மையாக மறைமுகம் இல்லாமல் பேசுவது

பிரபல நடிகர் என்ற பந்தா இல்லாதது

இலகுவாக இருக்கும் விதம்
 
நன்றி- http://speedsays.blogspot.com/