வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Monday 1 April 2013

வாழை இலை

"நலமுடன் வாழ"

வாழை இலையின் பயன்கள்....

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

பைக் காதலன் கமல்ஹாசன்!

பைக் காதலன் கமல்ஹாசன்!


கமல்ஹாசன் அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை முதலில் வரவேற்பது இந்த மேட்ச்லெஸ் பைக்தான். 1954-ம் ஆண்டு மாடலான இந்த பைக், கமல்ஹாசனின் ஃபேவரிட்! 'ஹே ராம்’ படத்துக்காக வின்டேஜ் பைக்குகளைத் தேடியபோதுதான் உலக நாயகன் கண்களில் இந்த பைக் சிக்கியதாம். பைக் பிறந்த ஆண்டில்தான் கமல்ஹாசனும் பிறந்தார் என்பது பைக்கின் மீது அவரது காதலை இன்னும் அதிகரித்துவிட்டதாம். படத்துக்காக மட்டுமல்லாமல், சொந்தமாகவும் இந்த பைக்கை வாங்கி விட்டார் கமல். அன்று முதல் இன்று வரை பொக்கிஷமாக இந்த பைக்கைப் பாதுகாத்து வருகிறார்!

ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு?

பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான்.தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான்.தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள,குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான்.இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது.விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது.ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான்.இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.



இந்தியாவில் விவசாயம் :


என்ன இல்லை இந்த திருநாட்டில் ? என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை என்று பிரித்துள்ளனர்.வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம்.மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது.ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர்.மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான்.எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன் ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்துகொண்டான்.இயன்றவரை இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள் தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.


பசுமை புரட்சியும் அதன் விளைவுகளும் :

காலங்கள் மாறின.நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் "எனது அனுபவத்தில் நான் தஞ்சையின் சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை.அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது.அதற்கு அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது"
நெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 களில் "பசுமை புரட்சி " கொண்டு வரப்பட்டது.இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள்.இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.அதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம்.பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக விளைந்தது.ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம்காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது.அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு ,பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது.மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான்.வளம் இழந்த மண்ணோடும்,மண்ணுக்கு பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.



நம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம்.மண்ணுக்கும்,மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம்.ஆனாலும் காலம் கடக்க வில்லை.மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு,எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம்.பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.....