வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Thursday 9 January 2020

பள்ளிகளில் யோகா பாடம் 2020

ஆரோக்கியமாக வாழ, பூங்காக்கள், பள்ளிகளில் யோகா பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்



ஆரோக்கியமாக வாழ, பூங்காக்கள், பள்ளிகளில் யோகா பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், சென்னையில் உள்ள 38 பூங்காக்கள்,  பள்ளி மாணவர்கள், ஊழியர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு யோகா பயிற்சி அளிக்க100 ஆசிரியர்கள் ஆழியார் சென்று யோகா பயிற்சி பெற்றனர் என்றார்.

பின்னர் அது செயல்படுத்தப்படுவதில்லை என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மன அழுத்தம் நீங்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், முகம் அழகாக இருக்கவும் யோகா அவசியம் என்றார்.

ஆழியாறில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்களை கண்டறிந்து, மீண்டும் யோகா வகுப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.