வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Wednesday 5 October 2011

சரஸ்வதி வழிபாடு வாழ்த்துக்கள்...!!!



நாமகள் துதிபாடுவோம்


வெண்பனி போன்று மென்மைகொண்டதோர்
வெள்ளைக் கமலப் பூவினிலே - எங்கள்
உள்ளம் கவரும் கொள்ளை அழகுடன்
கல்விக்கதிபதி வீற்றிருப்பாள் -அவள்
கரங்களில் தவழும் மாணிக்கவீணையின்
சுரங்களில் நாதம் தவழ்ந்துவர-கல்வி
வரம் தரும் அன்னை நிரந்தரமாக-தன்
கருணைக் கடலை காட்டி நிற்பாள்
தெளிந்த நதி நீரில் கமலமெனப் போற்றும்
அழகுமலர் மீதில் காலையிளங் காற்றில்
கதிரவனின் சுடரொளிக் கீற்றில்
தேன் தமிழில் பாடலொன்று கேட்கும்
கலையரசி கரங்களினில்
தவளுகின்ற இசைக்கருவி
மழலை மொழி பேசும் ஒரு
குழந்தையதன் குரல்போல்
செந்தமிழின் பாடலொலி மீட்டும்
மாணிக்க வீணைதரும் இராகம்-நம்
மனதில் வரும் இனிமை மிகு மோகம்
கரம்கூப்பி வணங்குவோம் வாரீர்- சரஸ்வதியை
சிரம் தாழ்த்தி இறைஞ்சுவோம் வாரீர்
கல்வியில் நாம் புகழ் பெற்றிட வேண்டியே
நாமகள் துதி பாடுவோம் -இந்த
நானிலம் முளுவதும் வாணியைப் போற்றியே
பாமாலை நாம் பாடுவோம்
மலர் மாலை நாம் சூட்டுவோம்
மன மகிழ்வோடு பாட்டிசைப்போம்.