* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.
No comments:
Post a Comment