வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday, 9 August 2011

முருகனுக்குள் பிள்ளையார்

* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது.
* நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம் உணர்கிறோம். நெருப்பு  சுடுகிறது. பிரகாசமாக இருக்கிறது. சிவந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால், நெருப்பு என்பது என்னவோ ஒரே பொருள் தான்!
* மலர் என்று எடுத்துக் கொண்டால் அதன் வண்ணம் கணபதி. வடிவம் பார்வதி. வாசனை முருகன். தாயிடம் இரண்டு குழந்தைகளும் இரு பண்புகளாக இருக்கின்றன. இதில், நமக்கு உகந்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதை இஷ்டமுடன் வழிபாடு செய்கிறோம். அதுவே இஷ்ட தெய்வம்.
* உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் எந்த உருவிலும் காணலாம். முருகனிடம் கூட நீங்கள் பிள்ளையாரைக் காணமுடியும். “”பிடித்தால் பிள்ளையார்” என்று சொல்லுகின்றனர் அல்லவா? அது இது தான்.

No comments: