வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday, 2 August 2011

எங்க அப்பா...!


(மகனின் உளப்பாங்கு )
4 வயதில் -எங்கப்பாவால் எதையும் செய்ய முடியும்.
5 வயதில் - எங்கப்பாவுக்கு நிறையத் தெரியும்.
6 வயதில் - எங்கப்பா உங்கப்பாவை விடப் புத்திசாலி.
8 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் சுரியாகத் தெரியாது.
10 வயதில் - பழைய நாட்களில் எங்கப்பா வளர்ந்த போது விசயங்கள் நிச்சயம்   வேறு மாதிரி இருந்திருக்ககும்..
12 வயதில் - இயல்பாக அப்பாவுக்கு அதைப்பற்றியெல்லாம் தெரியாது. குழந்தைப் பருவத்தை ஞாபகம் கொள்ள முடியாத அளவிற்கு ரொம்ப வயதாகி விட்டது.
14 வயதில் - எங்கப்பாவுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க வேண்டாம். அவர் பழைய காலத்து மனுசன் !
21 வயதில் - அவரா ? கடவுளே ! இன்றைக்கு அவர் எந்த விதத்திலும் ஒத்து வராதவர்.
25 வயதில் - அப்பாவுக்கு இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அவர் நீண்ட காலத்தை கடந்து வந்தவர் அல்லவா ?
30 வயதில் - அப்பா என்ன நினைக்கிறார் என்று கேட்கலாம். அவருக்கு நிறைய அனுபவம் உண்டு.
35 வயதில் - நான் எங்கப்பாவைக் கேட்காமல் ஒரு சின்ன விசயத்தைக் கூட செய்யறதில்லை.
40 வயதில் - அப்பா எவ்வளவு அழகா இந்த விசயத்தைக் கையாண்டுட்டார்னு ஆச்சரியமாக இருக்கு . அவருக்கு விவேகம் அதிகம். உலக அனுபமும் இருக்கு.
50 வயதில் - நான் எதுவாக இருந்தாலும், இங்கே அப்பா இருந்தால் அதை அவரிடம் ஒப்படைச்சுடுவேன். எனவே இந்த விசயத்தைப் பற்றி அப்பாவிடம் பேசலாம். நான் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கலாம்..

No comments: