எல்லோரிடமும் அறிவு இருக்கிறது. இதைச் சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து செயல்படுத்தினால் நன்மை கிடைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த இராபர்ட் என்பவர் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். 20 – வது நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. பேனாவும், மையும் இல்லாமல் அற்புதமாக எழுதலாம். விபரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள் என்று. இராபர்ட்டுக்கு மணியார்டர்கள் வந்து குவிந்தன. அதற்கு அவர் எழுதிய பதில் இது தான். '' புத்திசாலிகளே ! பென்சிலை வைத்து எழுதுங்கள், இராபர்ட் ஏமாற்றவில்லை. நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள்தான் ஏமாந்தார்கள்.
No comments:
Post a Comment