Friday, 5 August 2011

முடி போச்சே...?

முடி கொட்டும் பிரச்னையா?

இதப்படிங்க முதல்ல…
பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது. என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள்  இதோ சில டிப்ஸ்…

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.
* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.
* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.
* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.
* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.
* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.
* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.




முடி வள‌ர்வத‌ற்கான உணவு முறை

பெரு‌ம்பாலு‌ம் முடி கொ‌ட்டுவதை‌த் த‌வி‌ர்‌க்க ஷா‌ம்புவை மா‌ற்றுவோ‌ம் அ‌ல்லது ப‌ல்வேறு கலவைகளை நமது தலை‌யி‌ல் மொழு‌கி கு‌ளி‌ப்போ‌ம்.

இவை எ‌ல்லாமே மே‌ல் வேலைக‌ள்தா‌ன். எ‌வ்வளவுதா‌ன் செடி‌க்கு த‌ண்‌ணீ‌ர், உர‌ம் போ‌ட்டாலு‌ம், வே‌‌ரி‌ல் தானே ‌விஷய‌ம் இரு‌க்‌கிறது.

அதுபோல‌த்தா‌ன், உ‌ங்க‌ள் உட‌ல் நல‌னி‌ல்தா‌ன் முடி வள‌ர்‌ச்‌சியு‌ம் அட‌ங்‌கியு‌ள்ளது. அ‌திகமாக முடி கொ‌ட்டுபவ‌ர்க‌ள் மரு‌‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று ‌சி‌கி‌ச்சை பெறுவது ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் நமது உட‌லி‌ல் சுர‌க்க வே‌ண்டிய ‌சில ஹா‌ர்மோ‌ன் ப‌ற்றா‌க்குறையாலு‌ம் முடி கொ‌ட்டலா‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம்.

ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பிகளை ச‌ரி செ‌ய்ய நமது உண‌விலேயே ‌மரு‌ந்து ‌உ‌ள்ளது. புர‌த‌ம் ‌நிறைந்த பருப்பு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், அசைவ உணவு சா‌ப்‌பிடுபவ‌ர்க‌ள் எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்.



ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி
, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும்.

சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

No comments:

Post a Comment