Sunday, 21 August 2011

இங்க் பேனாக்கள் - கால ஓட்டத்தில் ..




இங்க் பேனா 20 வருடக்ளுக்கு முன் வெகு சிறப்பாக கோலச்சிய விஷயம் இது. நாங்கள் படிக்கும் போது இங்க் பேனாவில்தான் எழுதினோம்.

ஒரு பேனாவின் விலை அப்போது 5 விருந்து பத்து ரூபாய்தான் அதை வாங்கும் போதே கடவுளின் கடை கண் பார்வை பட்டு விட்டால் நல்லது இல்லை என்றால் டெய்லி சனி நமது வெள்ளை சட்டை யுவனிபார்மில் விளையாடும்...

துணிதுவைத்து போடும் போதெல்லாம் எனக்கு திறமை இல்லை உருப்படாதது என்று சொல்லி திட்டிக்கொண்டே இருப்பாள் என் அம்மா ... பொதுவாக என் அம்மா மொத்தமாக ஒரு பாட்டில் பிரில் இங்க் வாங்கி கொடுப்பாள் நான் ரொம்ப எழுதுவேன் என்று..

எப்படியும் நான் எட்டாம் நாள் அல்லது ஒன்பதாம் நாள் வீட்டுதரையில் அமீபா கோலம் போட்டு இருப்பேன் இப்போது என் அம்மாவுக்கு என் எதிர்காலம் பற்றிய பயம் அதிகமாகி துடைப்பத்தால் வெளுத்துவாங்குவாள்..

அப்போது பிளாஸ்டிக்கில் ஒரு மை பேனா ஒன்று அறிமுகம் ஆயிருந்தது பேனா விலை60 பைசா மட்டுமே... அப்போது அது பல வண்ணங்களில் வந்து இருந்தது. அதற்க்கு பிறகு பல வருங்கள் கழித்து மிக சரியாக 12 வருடங்களுக்கு முன் வந்த ரெனால்ட்ஸ் மை பேனா
( உலகம் விரும்பும் உன்னத பேனா... விளம்பர வாசகம்) வந்து அதுவரை மாணவச்செல்வங்களிடம் கோலாச்சி கொண்டு இருந்த இங்க் பேனாக்கள் தங்கள் வசீகரத்தை இழக்க தொடங்கின.

சில நேரத்தில் இங்ன் பேனாக்கள் ஏர் லாக் ஆகி திறக்க முடியாமல் இருக்கும் இங்க் போட்டால்தானே எழுதுவது அதை திறக்க படாத பாடு பட வேண்டும். அதற்க்கு என்று சில எக்ஸ்பர்ட்கள் பள்ளியில் படிப்பார்கள் .
அவர்களிடம் எடுத்து சென்றாள் தன் பலத்தை பிரயோகித்து சட்டென திறந்து விடுவார்கள், சில நேரத்தில் அவர்களால் முடியாது.

அப்போது சட்டை துணியை பேனா மேல் வைத்து பல்லால் கடித்து அதனை திறப்பார்கள் அதனால் எப்போதும் எல்லோர்பேனாவில் பல்லால் கடித்து திறந்த அடையாள முத்திரை நிச்சயம் இருக்கும்

என் நண்பன் நாகராஜ் வெகு நாட்களுக்கு முன் அவசரத்துக்கு ஜான்சி கடித்து திறந்து கொடுதத பல் தடத்தை ஏதோ டைனோசர் பாசில் போல் கணக்கிடைக்காதது போல் பாவித்தான்.

அப்போது இங்க் பேனாவில் காஸ்ட்லியாக கலக்கிய பேனா ஹீரோ பேனா. அந்நாளில் ஹீரோ பேனாஎன்பது பணக்கார பசங்களிடம் மட்டும் இருக்கும். அப்படி வேறு யாராவது வைத்து இருக்கிறார்கள் என்றாள்அவர்கள் மாமா சவுதி அல்லது சிங்கப்பூர் இருந்து சமீபத்தில் வந்து இருக்கின்றார் என்று பொருள்.

நாராயணன் ஒரு வாத்தியார். ஆங்கில பாடம் எடுப்பார்எழுதும் போது மை பேனாவில் எழுதினால்
“ நீ என்ன மளிகை கடையில கணக்கா எழுத போறன்னு ”சொல்லி உதைத்து இங்க் பேனாவில் எழுதச்சொல்லி அடம் பிடிப்பார்...

இங்க் பேனாவில் ஒரே ஒரு பிரச்சனை அது கன்னிப்பெண் போல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை யாரிடமும் இரவல் தரக்கூடாது அப்படி தந்தால் உங்கள் ஸ்டைலுக்கு அது எழுதாது அபபடி எழுதினாலும் பேப்பரை கிழிக்கும்....


பேனா எப்போது பாக்கெட்டில் வைத்து ஓடி விட்டு அலலத நடந்து திறந்து பார்த்தால் இங்க் லீக்காகி இருக்கும் அதற்க்கு பசங்க பேனா கழுயுது என்பார்கள்...

பரிட்சை கடைசிநாளில் பேனா முழுவதும் இங்க் நிரப்பி அதில் கொஞ்சம் வாழைச்சாற்றை கலந்து பசங்களின் வெள்ளை சட்டை மேல் மார்டன் ஆர்ட் வரைவோம்...

அதனை மிகச்சிறப்பாக தமிழ் படத்தில் காட்சியாக வைத்தவர் கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராம் அவர்கள்.. பரிட்சை முடிந்ததை காண்பிக்க அந்த இங்க் அடிக்கும் காட்சி வைத்து இருப்பார்....


இன்று உலக பொருளாதார மாற்றத்தால் பல பொருட்கள் மற்றும் பல விதமான பேனாக்கள் கிடைத்தாலும், புது இங்க் பேனா வாங்கி அந்த சின்ன கவரை உடனே தூக்கி போடாம பத்திரமா ஒரு வாரத்துக்கு வைத்து அதன் பிறகு அதனை தூக்கி எறிந்து பத்து பைசாவுக்கு இங்க் வாங்கி அதனை ஊத்தும்போதே கை விரல்கள் நீலக்கலராகி இப்போது பதறவது போல் எந்த கலலையும் இல்லாமல் கைகளால் துடைத்து பேனாவை மூடு்ம் போது பிரஷரில் வெளி வருவதை ஸ்டைலாக தலையில் தடவி துடைத்து எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் ..... அது ஒரு கனாக் காலம்...


இப்போது இங்க் பேனாக்கள் இல்லாமல் இல்லை அனால் முன்பு போல் கோலாச்சவது இல்லை என்பதே என் கருத்து...

இந்த கட்டுரை உங்கள் பழைய பள்ளி நாட்களை, ஞாபகங்களை நினைவு படுததி இருந்தால் பின்னுட்டம் இட்டு தெரியபடுத்துங்கள்...

No comments:

Post a Comment